Dev All Banner USA

இரண்டு நாட்கள் இடைவெளி இல்லாமல் நடித்த விஷால்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

‘அயோக்யா’ திரைப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி ஷூட்டிங்கில் 48 மணி நேரம் இடைவிடாமல் நடித்து படக்குழுவை நடிகர் விஷால் ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

Vishal continously shot 48 hours for Ayogya

லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் பி.மது தயாரிப்பில்  விஷால் நடித்து வரும் படம் ‘அயோக்யா’. ஏஆர் முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்கும் இப்படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள மோகன் ஸ்டூயோவில் மிகப் பிரமாண்ட நீதிமன்றம் செட்  அமைக்கப்பட்டு, படத்தின் திருப்புமுனையாக அமையவுள்ள முக்கியமான காட்சியை கடந்த 3 நாட்களாக படக்குழு தொடர்ச்சியாக ஷூட்டிங் நடத்தி வருகிறது.

பார்த்திபன்,ராதாரவி,கே எஸ் ரவிகுமார், ஆடுகளம் நரேன், வம்சி, நடிகை ராஷி கண்ணா ,சோனியா அகர்வால், சச்சு உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்கள் நடிக்கும் காட்சியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட துணை நடிகர்கள் இணைந்து  நடிக்கும் பிரம்மாண்ட காட்சி படமாக்கப்பட்டது.

இது திரைப்படத்தின் முக்கிய காட்சி என்பதால் இக்காட்சி முழுவதும் நடிகர் விஷால் தொடர்ந்து நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இவருடன் இணைந்து நடிக்கும் கதாபாத்திரங்கள் அவரவர் பகுதியை நடித்துவிட்டு சென்றபோதும் , படத்தின் நாயகன் விஷால் மட்டும் இரவு பகல் பாராமல் சுமார் 48 மணி நேரம் தொடர் ஷூட்டிங்கில் நடித்துள்ளார்.

ஏற்கனவே இப்படத்திற்காக விஷால் தனது கடும் முயற்சியினால் மிடுக்காக ஒரு கம்பீரமான தோற்றத்திற்கு தன்னை மாற்றி இருந்த நிலையில், தற்போது தொடர்ந்து 48 மணி நேரம் படப்பிடிப்பில் ஈடுபட்டு அர்ப்பணிப்போடு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘அயோக்யா’ திரைப்படத்தின் ஷூட்டிங் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்னும் இரண்டு பாடல் காட்சிகள் மட்டுமே படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைப்பெற்று வருகிறது. இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Vishal continously shot 48 hours for Ayogya

People looking for online information on Ayogya, Raashi Khanna, Radhakrishnan Parthiban, Temper, Vishal, Vishal Shooting will find this news story useful.