உண்மையிலேயே 'இப்டி' தானா?.. இல்ல 'நமக்கு' கண்ணு தெரியலயா.. 'குழம்பும்' நெட்டிசன்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பார்ப்பவர்களை குழம்ப செய்யும் 5 வயது சிறுமியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உண்மையிலேயே 'இப்டி' தானா?.. இல்ல 'நமக்கு' கண்ணு தெரியலயா.. 'குழம்பும்' நெட்டிசன்கள்!

கிரிஸ்டோபர் பெரி என்பவர் அவருடைய பேஸ்புக் பக்கத்தில் ஐந்து வயது சிறுமியின் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்தப் படத்தைப் பார்க்கும்போது, அந்தச் சிறுமியின் கால்கள் மிகவும் மெல்லியதாக இருப்பதுபோலவும் சிறுமி ஒரு மாற்றுத்திறனாளி போலவும் தெரிகிறது. ஆனால் நன்றாக உற்று பார்த்தால் அவரது கைகளில் பாப்கார்ன் வைத்திருப்பது தெரியவரும்.

இந்த புகைப்படத்திற்கு கமெண்ட் பதிவிடும் பலரும் முதலில் நான் அந்த சிறுமி மாற்றுத்திறனாளி என நினைத்தேன். கடவுள் அந்த குழந்தைக்கு நீண்ட ஆயுளை கொடுக்கட்டும், நான் என்னுடைய கண்ணாடியை துடைத்துக்கொண்டு பின்னர் மீண்டும் பார்த்தேன் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஆமா நீங்க என்ன நெனைக்கிறீங்க?