ஷாப்பிங் மாலில் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்..! 20 பேர் பலியான பரிதாபம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்கா வணிக வளாகத்தில் மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஷாப்பிங் மாலில் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்..! 20 பேர் பலியான பரிதாபம்..!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள எல் பஸோ என்னும் இடத்தில் வணிக வளாகம் ஒன்று அமைந்துள்ளது. விடுமுறை தினம் என்பதால் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்துள்ளது. அப்போது வணிக வளாகத்துக்குள் வந்த மர்ம நபர் சரமாரியாக துப்பாக்கியால் சுட ஆரம்பித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் அலறி ஓட ஆரம்பித்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சுட்டில் 20 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 40 -க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் டெக்சாஸ் கவர்னர் தெரிவித்துள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்தியது தொடர்பாக 21 வயது இளைஞர் ஒருவரிடம் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வணிக வளாகத்துக்குள் தற்சமயம் யாரும் வரவேண்டாம் என போலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

EL PASO, PEOPLE, KILLED, AMERICA, GUNSHOOT, ELPASOSHOOTING, ELPASOSHOOTER, ELPASOSTRONG