‘உரசிச் சென்ற அரசுப்பேருந்து..’ தடுமாறி விழுந்த இளைஞருக்கு.. ‘அடுத்த நொடி நடந்த பயங்கரம்..’

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து உரசியதால் ஏற்பட்ட கோர விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

‘உரசிச் சென்ற அரசுப்பேருந்து..’ தடுமாறி விழுந்த இளைஞருக்கு.. ‘அடுத்த நொடி நடந்த பயங்கரம்..’

முத்துச்செட்டிபாளையத்தைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் கடந்த 30ஆம் தேதி அவிநாசி பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையத்துக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அவருக்கு அருகில் வலதுபுறமாக சென்றுகொண்டிருந்த அரசுப்பேருந்து ஒன்று திடீரென இடதுபுறமாகத் திரும்பியுள்ளது. திரும்பிய பேருந்து அருண்குமார் சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனத்தின்மீது உரசியதாகக் கூறப்படுகிறது.

இதனால் நிலைதடுமாறி சரிந்து கீழே விழுந்த அருண்குமார் மீது ஒருநொடியில் பேருந்தின் பின் சக்கரம் ஏறி இறங்கியுள்ளது. இந்த விபத்தின்போது தலைக்கவசம் அணியாமல் இருந்த அருண்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய அரசுப்பேருந்து ஓட்டுநர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

GOVERNMENT, BUS, TWOWHEELER, ROAD, ACCIDENT, AVINASHI, TIRUPPUR