கோவையில் லாரி-பேருந்துக்கு 'இடையே'... சிக்கிய வேன்... 2 பேர் பலி... இருவர் 'உயிருக்கு' போராட்டம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தவறான பாதையில் வந்த பேருந்தால் வேன் விபத்தில் சிக்கிய கொடூரம் கோவையில் நிகழ்ந்துள்ளது.

கோவையில் லாரி-பேருந்துக்கு 'இடையே'... சிக்கிய வேன்... 2 பேர் பலி... இருவர் 'உயிருக்கு' போராட்டம்!

கோவை காரமடை மேம்பாலத்தில் தவறான பாதையில் பேருந்து வந்ததால் லாரிக்கும், பேருந்துக்கும் இடையே வேன் சிக்கி அப்பளம் போல நொறுங்கியது. இந்த விபத்தில் வேனில் இருந்த இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இரண்டு பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகி, பார்ப்பவர்களின் மனதை கனக்க செய்துள்ளது.