‘இளைஞரை அடித்துக் கொலை செய்த கும்பல்..’ பேரம் பேசியதில் தொடங்கிய விபரீதம்..

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

‘இளைஞரை அடித்துக் கொலை செய்த கும்பல்..’ பேரம் பேசியதில் தொடங்கிய விபரீதம்..

வடகுச்சிபாளையத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தற்காலிக ஆம்புலன்ஸ் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். மருத்துவமனை அருகே உள்ள துணிக்கடைக்கு சென்ற அவர் அங்கு விலையைக் குறைத்துப் பேசியுள்ளார். அதனால் அவருக்கும் கடை உரிமையாளர் முருகையன் என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த தினேஷ் முருகையனை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதைக் கேள்விப்பட்ட முருகையனின் மகன் ஆகாஷ் நண்பர்கள் 10 பேருடன் சேர்ந்து சென்று தினேஷை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த தினேஷ் உயிரிழந்துள்ளார். ஆகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BEATENTODEATH