Darbar USA

“சமைக்குறதுல இருந்து எல்லாமே நான்தான்!”... “அதான் இரும்பு ராடால”... “ஈரோட்டில் நடந்த பதைபதைப்பு சம்பவம்!”

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள பி.மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் நடத்தி வரும் சொந்த விசைத்தறிப் பட்டறையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நவீன்குமார் (25), சுகேந்திரகுமார் வர்மா (28), சவுராப் ரஞ்சன் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரவீந்திரகுமார் ஆகிய 4 பேரும் கடந்த 2 வருடங்களாக பணிபுரிந்து வந்தனர்.

“சமைக்குறதுல இருந்து எல்லாமே நான்தான்!”... “அதான் இரும்பு ராடால”... “ஈரோட்டில் நடந்த பதைபதைப்பு சம்பவம்!”

இவர்களுள் ரவீந்திரகுமாரைத் தவிர மற்ற 3 பேரும் நண்பர்கள். உரவினர்களும் கூட. இவர்கள் 3 பேரும் சேர்ந்து ரவீந்திரகுமாரை கேலி, கிண்டல் செய்ததாலும்,  வம்பிழுத்துக் கொண்டே இருந்ததாலும், சமையல் செய்வதில் தொடங்கி எல்லா வேலைகளையும் தன்னையே செய்யச் சொல்லி கஷ்டப்படுத்தியதாலும் ரவீந்திர குமார், அவர்கள் உறங்கும் சமயம் பார்த்து காத்திருந்துள்ளார்.

இந்நிலையில் மது அருந்திவிட்டு உறங்கும்போது, நவீன் குமாரையும், சுகேந்திரகுமாரையும் ரவீந்திர குமார் இரும்பு ராடால் ஓங்கி அடித்தே கொன்றுவிட்டு, தப்பிவிட்டதாகவும் ஏதாவது ஒரு கதையை கட்டிவிட்டு தப்பிவிடலாம் என்று யோசிப்பதற்குள் போலீஸார் பிடித்துவிட்டதாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

சம்பவம் நடந்த அன்று சவுராப் ரஞ்சன் தன் மனைவியுடன் அதே பகுதியில் இருக்கும் தன் வீட்டில் இருந்ததால், அவர் இந்த சம்பவத்தில் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ERODE