'தமிழகத்தில்' வங்கிகளின் 'வேலை' நேரத்தில் 'மீண்டும்' மாற்றம்... வெளியாகியுள்ள 'புதிய' அறிவிப்பு... 'விவரங்கள்' உள்ளே...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் வங்கிகள் இயங்கும் நேரம் நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

'தமிழகத்தில்' வங்கிகளின் 'வேலை' நேரத்தில் 'மீண்டும்' மாற்றம்... வெளியாகியுள்ள 'புதிய' அறிவிப்பு... 'விவரங்கள்' உள்ளே...

கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை அடுத்து காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மட்டுமே வங்கிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் கொரோனா நிவாரணத்தொகையை மத்திய அரசு வங்கிக்கணக்கு வழியே செலுத்தியதால், அந்த தொகையை எடுப்பதற்காக வங்கிகளின் வேலை நேரம் 2 மணி நேரம் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது மீண்டும் வங்கிகளின் வேலை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு இரண்டாவது முறையாக நீடிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை மட்டுமே வங்கிகள் இயங்கும் என மாநில அளவிலான வங்கிக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் தங்களுடைய பரிவர்த்தனைகளை பகல் 1 மணிக்குள் முடித்துக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.