கோவை '+2 மாணவியை' தூக்கிச் சென்று 'கூட்டு பலாத்காரம்'.. 3 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கடந்த மாதம் 26-ஆம் தேதி, கோவை சீரநாயக்கன் பாளையத்தில், காதலனுடன் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த இளம் பெண்ணின் காதலரை, அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல், தாக்கிவிட்டு,  அந்த இளம் பெண்ணை மறைவான இடத்துக்கு தூக்கிக் கொண்டு சென்று கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.

கோவை '+2 மாணவியை' தூக்கிச் சென்று 'கூட்டு பலாத்காரம்'.. 3 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்!

இது தொடர்பாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட, மணிகண்டன் (27), பப்ஸ் கார்த்தி (26), ராகுல் (21), பிரகாஷ் (22), கார்த்திகேயன் (28), நாராயண மூர்த்தி (32) ஆகிய 6 பேரில், மணிகண்டன், பப்ஸ் கார்த்தி, ராகுல் உள்ளிட்ட 3 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கு அனைத்து மகளிர் போலீசார், மாநகர போலீஸ் கமி‌ஷனர் சுமித் சரணுக்கு பரிந்துரை செய்தனர்.

இதனையடுத்து, இந்த 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்வதற்கான உத்தரவு நகல், கோவை சிறைக்கு அனுப்பப் பட்டது. எனினும் மற்ற 3 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்வதற்கான நடவடிக்கையை காவல்துறையினர் எடுத்து வருகின்றனர்.

COIMBATORE