'இதெல்லாம் போலி நகை.. நாங்க யார் தெரியும்ல?'.. பிரபல டி.நகர் நகைக்கடையை மிரட்டி பணம் பறித்த கும்பல்.. பொறி வைத்து பிடித்த போலீஸார்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை தியாகராய நகரில் உள்ள நகைக் கடையில், கடை ஊழியர்களை மிரட்டி பணம் பறித்ததாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

'இதெல்லாம் போலி நகை.. நாங்க யார் தெரியும்ல?'.. பிரபல டி.நகர் நகைக்கடையை மிரட்டி பணம் பறித்த கும்பல்.. பொறி வைத்து பிடித்த போலீஸார்!

சென்னை தியாகராய நகரில் உள்ள பிரபலமான நகைக்கடை ஒன்றில், தான் வாங்கிய 3 சவரன் தங்கச் சங்கிலி, போலி என்றும், மாவு தடவி விற்கப்படுவதாகக் கூறியும், அவை போலி என்பதை வைத்து தகவல் பரப்பி விடுவேன் என்று மிரட்டியும் 15 லட்சம் ரூபாய் வரை பணம் பறித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த முதல் நிலை அனுபவத்துக்கு பிறகு , இம்முறை போலீஸாரிடம் தகவல் கூறியிருந்த அந்த நகைக்கடை நிர்வாகம் மீண்டும் அந்த கும்பலின் வருகைக்காக காத்திருந்தபோது, அந்த கும்பலோ இம்முறை 15 பேருடன் மீண்டும் கடைக்கு வந்து, 1 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டியது.

அந்த சமயத்தில்தான், தயாராக இருந்த போலீஸார் அனைவரையும் கூண்டோடு பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் 5 பேர் தப்பிவிட்டதால்,  தனசேகர் தலைமையிலான 10 பேர் மட்டும் பிடிபட்டனர். இவர்களை விசாரித்தபோது இவர்களிடம் இருந்து போலி பத்திரிகையாளர் அடையாள அட்டைகள், துப்பாகிகள், கார்கள், கத்தி, ரொக்கப் பணம் முதலானவை பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ROBBERY, CHENNAI, TNAGAR, JEWELLERY