'இதுக்கு ஒரு எண்டே இல்லையா'...'என்ன ராசி இது,இப்படி மோசமா துரத்துது'...சோகத்தில் பிரபல வீரர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நடந்து முடிந்த உலகக்கோப்பை போட்டியில் இந்திய வீரர்களுக்கு என்ன ராசியோ தெரியவில்லை, பலரும் காயத்தில் சிக்கினார்கள். அதிலும் பலராலும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக வீரர் விஜய் சங்கரின் காயம் தொடர்ந்து வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

'இதுக்கு ஒரு எண்டே இல்லையா'...'என்ன ராசி இது,இப்படி மோசமா துரத்துது'...சோகத்தில் பிரபல வீரர்!

உலகக்கோப்பைகான இந்திய வீரர்களின் தேர்வில் தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் இடம் பெறுவர்களா என  ரசிகர்கள் பலரும் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதற்கு ஏற்றாற் போல் தினேஷ் கார்த்திக் மற்றும் விஜய் சங்கர் இருவரும் அணியில் இடம் பிடித்தார்கள். ஆனால் உலகக்கோப்பை போட்டியில் விஜய் சங்கர் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. அதோடு உலகக்கோப்பை தொடரின் நடுவே அவருக்கு ஏற்பட்ட காயம் பெரும் பின்னடைவாகவும் மாறியது.

இதனிடையே மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் அவர் இடம்பெறுவாரா என்பதும் கேள்விக் குறியாகியுள்ளது. நடைபெறவிருக்கும் டிஎன்பில் தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு விஜய் சங்கர் கேப்டனாக இருக்கிறார். அவர் தனது முதல் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிராக  களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காயம் காரணமாக விஜய் சங்கர் அணியில் தேர்வாக வில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு கேப்டனாக கவுசிக் காந்தி தேர்வு செய்யப் பட்டுள்ளார். மேலும் காயம் குணமாகாத பட்சத்தில் இந்த தொடரின் பாதி போட்டிகள் வரை அவர் விளையாடமாட்டார் என தெரிகிறது.

CRICKET, TNPL 2019, VIJAY SHANKAR, CHEPAUK SUPER GILLIES, INJURED