ஒருவழியா 'கேப்டனுக்கு' அடிச்ச லக்... ஆனாலும் இது 'சரிப்பட்டு' வருமா?... ரசிகர்கள் கேள்வி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நியூசிலாந்து-இந்தியா மோதும் முதல் டி20 போட்டி இன்று பிற்பகல் 12.20 மணிக்கு தொடங்கவுள்ளது. இதனையொட்டி சற்றுமுன் டாஸ் போடப்பட்டது. இதில் டாஸை வென்ற கேப்டன் கோலி முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.

ஒருவழியா 'கேப்டனுக்கு' அடிச்ச லக்... ஆனாலும் இது 'சரிப்பட்டு' வருமா?... ரசிகர்கள் கேள்வி!

நியூசிலாந்து பவுலர்கள் மிகவும் டப் கொடுக்க கூடியவர்கள் என்பதால் முதலில் பவுலிங் தேர்வு செய்தது சரியா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஏனெனில் உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் 2-வதாக பேட்டிங் செய்த இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது.

முன்னதாக ஆஸ்திரேலியாவுடன், இந்தியா மோதிய 3 ஒருநாள் போட்டிகளிலும் விராட் கோலி டாஸ் வெல்லவில்லை. எனினும் அந்த தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் டாஸ் எந்தளவுக்கு பங்கு வகிக்கப்போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.