‘மீண்டும் ஒரு தெலுங்கானா’! ‘பாலியல் வன்கொடுமை செய்து பெண் எரிப்பு’.. 90 சதவீத தீக்காயத்துடன் உயிருக்கு போராடும் இளம்பெண்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை செய்து பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

‘மீண்டும் ஒரு தெலுங்கானா’! ‘பாலியல் வன்கொடுமை செய்து பெண் எரிப்பு’.. 90 சதவீத தீக்காயத்துடன் உயிருக்கு போராடும் இளம்பெண்..!

கடந்த மார்ச் மாதம் உத்தரப்பிரதேச மாநிலம் உன்னவ் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை 2 பேர் பாலியல் வன்கொடுமை செய்தனர். இதனை அடுத்து பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அந்த இரண்டு நபர்களையும் போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஒரு நபர் ஜாமினில் வெளியே வந்துள்ளார். மற்றொரு நபர் போலீசாரிடம் தப்பியுள்ளார். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் வழக்கு தொடர்பாக நீதிமன்றம் சென்றுகொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் பெண்ணை கடத்தி ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு தூக்கிச் சென்றுள்ளது.

பின்னர் அப்பெண்ணை மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். இதனை அடுத்து 90 சதவீத தீக்காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அப்பெண் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதனை அடுத்து மேல் சிகிச்சைக்காக விமானம் மூலம் டெல்லி கொண்டு செல்லப்பட்டுள்ளார். தற்போது பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக தன்னை பாலியல் வன்கொடுமை செய்த நபர்களே தனக்கு தீ வைத்ததாக அப்பெண் வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் 5 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

CRIME, SEXUALABUSE, POLICE, UNNAOCASE, WOMAN