'அசுர வேகத்தில் வந்த 'யமஹா பைக்'... 'குறுக்கே வந்த பெண்கள்'... உதறல் எடுக்க வைக்கும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

அதிவேகமாக சாலையில் வந்த பைக்கின் முன்பு திடீரென பெண்கள் குறுக்கே வர, சாலையில் நிகழ்ந்த திக் திக் நிமிடங்களை விவரிக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

'அசுர வேகத்தில் வந்த 'யமஹா பைக்'... 'குறுக்கே வந்த பெண்கள்'... உதறல் எடுக்க வைக்கும் வீடியோ!

தற்போது இளைஞர்கள் மற்றும் கல்லூரி படிக்கும் மாணவர்கள் என அதிகமானோர் உபயோகிப்பது சூப்பர் பைக்குகளை தான். அது போன்ற பைக்குகளில் இருக்கும் பவர் மற்றும் வேகமாக செல்லும் திறன் இளசுகளுக்கு ஒரு திர்லிங்கை கொடுக்கிறது என்றாலும், அதிலிருக்கும் ஆபத்துகள் ஏராளம். இது போன்ற சூப்பர் பைக்குகளில் அதிவேகமாக செல்வதால் ஏராளமான விபத்துகளும் நிகழ்கின்றன.

இந்நிலையில் அதுபோன்ற ஒரு ஆபத்தான சம்பவம்தான் அண்மையில் நிகழ்ந்துள்ளது. இருப்பினும் இதில் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை என்றாலும், பார்க்கும் பலரையும் கதிகலங்க வைத்துள்ளது இந்த வீடியோ. யமஹா ஆர்15 என்ற பைக்கில் பயணிக்கும் இளைஞர் ஒருவர் அதிவேகத்தில் செல்கிறார். மணிக்கு 128 கிமீ வேகத்தில் சாலையில் சென்றுக்கொண்டிருக்கும்போது, திடீரென இரு பெண்கள் சாலையை கடக்க முயற்சி செய்கிறார்கள்.

அப்போது ஒரு பெண் மட்டும் நடுவழியிலேயே தங்கிவிட, மற்றுமொரு பெண் முன்னேறி சென்றுவிடுகிறார். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தில், பைக்கில் வந்த நபர் இரு பெண்களுக்கும் இடையே நுழைந்து சென்று விடுகிறார். ஒரு வேளை அந்த இளைஞரால் பைக்கை கட்டுப்படுத்த முடியாமல்  போயிருந்தால் நிச்சயம் பெரும் அசம்பாவிதம் நடந்திருக்கும். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ACCIDENT, PEDESTRIAN, YAMAHA R15