'சொத்தை எழுதி கொடு'...'அப்போதான் எல்லாம் நடக்கும்'... 'மிரட்டிய ரகசிய காதலி'... அரங்கேறிய கொடூரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பெண்ணை கொலை செய்து சடலத்தை கழிவுநீர்த் தொட்டியில் மறைத்து வைத்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'சொத்தை எழுதி கொடு'...'அப்போதான் எல்லாம் நடக்கும்'... 'மிரட்டிய ரகசிய காதலி'... அரங்கேறிய கொடூரம்!

வேலூர் மாவட்டம் பாகாயம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி சுலோச்சனா. 43 வயதான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென மாயமானார். அவர் எங்கு சென்றார் என்பது மர்மமாக இருந்தது. இந்நிலையில் திருச்சியில் இருந்து உறவுக்காரர்களின் வீட்டிற்கு வந்த, கிருஷ்ணமூர்த்தியின் சித்தப்பா மகனான ரமேஷ், அங்குள்ள டாஸ்மாக் பாரில் மது அருந்தியுள்ளார். போதை தலைக்கேறிய நிலையில், தான் ஒரு கொலை செய்து விட்டதாக புலம்பிய அவர் திடீரென பாகாயம் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.

இதையடுத்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டார்கள். இதில் பல  அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன. திருச்சியில் கொத்தனாராக வேலை பார்க்கும் ரமேஷுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். மாயமான சுலோச்சனாவின் மகன் மற்றும் மகளுக்கு திருமணம் முடிந்து விட்டது. இதனிடையே இருவருக்கும் முறையற்ற உறவு இருந்துள்ளது. இதனால் வாரந்தோறும் சுலோச்சனாவை சந்திக்கும் பழக்கத்தை ரமேஷ் வைத்திருந்தார். இதன் காரணமாக குடும்பத்தில் பிரச்சனை நிலவி வந்தது.

இருவரின் முறையற்ற பழக்கம் தீவிரமடைய, தனது பெயரில் உள்ள வீடு மற்றும் சொத்துகளை எழுதி வைப்பதாக சுலோச்சனாவிடம் ஆசை வார்த்தைகளை அள்ளி விட்டிருக்கிறார் ரமேஷ். இதனை நம்பிய சுலோச்சனா தனது மருமகனிற்கு சொந்தமான வீட்டில் வைத்து ரமேஷை தனிமையில் சந்தித்து வந்துள்ளார்.. இதற்கிடையே சம்பவத்தன்று ரமேஷுடன் தனிமையில் இருந்த சுலோச்சனா, சொத்துக்களை தனது பெயரில் எழுதி வைக்க வேண்டும், இல்லையென்றால் நாம் இனிமேல் சந்திக்க முடியாது என பிரச்சனை செய்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ், அங்கு கிடந்த இரும்புக் கம்பியால் சுலோச்சனா தலையில் பலமாக அடித்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கிச் சரிந்த சுலோச்சனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து சடலத்தை வீட்டில் உள்ள கழிவறைத் தொட்டியில் மறைத்து வைத்துவிட்டு சென்றதாக ரமேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர், சுலோச்சனாவின் சடலத்தைக் கைப்பற்றி பிணக்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். முறையற்ற உறவு கொலையில் முடிந்த நிகழ்வு அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MURDER, SEPTIC TANK, VELLORE, ILLEGAL AFFAIR