22ம் தேதி-யாரும் வீட்டைவிட்டு 'வெளியே' வரவேண்டாம்... பிரதமர் மோடி 'வேண்டுகோள்'... என்ன காரணம்?... தேசத்தை திரும்பி பார்க்க வைத்த பிரதமரின் உரை!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி முக்கிய அறிவிப்புகளை தெரிவித்துள்ளார்.

22ம் தேதி-யாரும் வீட்டைவிட்டு 'வெளியே' வரவேண்டாம்... பிரதமர் மோடி 'வேண்டுகோள்'... என்ன காரணம்?... தேசத்தை திரும்பி பார்க்க வைத்த பிரதமரின் உரை!

கொரோனா குறித்து நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி பேசியதாவது,

"உங்களது சில முக்கியமான நேரம் எனக்குத் தேவைப்படுகிறது. இந்தியா மிக மன தைரியத்துடன் கொரோனாவை எதிர்கொண்டு வருகிறது. ஒவ்வொரு இந்தியரும் இந்த ஆபத்தான சூழலில் விழிப்புடன் இருக்க வேண்டும். கொரோனாவால் உலகம் மிகப்பெரிய அச்சுறுத்தலை சந்தித்து வருகிறது. உலகப்போரை விட மோசமான தாக்குதலாக இது இருக்கிறது.

வரும் சில வாரங்கள் அரசுக்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். கொரோனா இந்தியாவை பாதிக்காது என நினைப்பது தவறு. மக்கள் கூடுவதை தவிர்த்து முடிந்தளவுக்கு தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். மருத்தவர்கள், ஊடகத்தினர், போக்குவரத்து துறையினர் போன்றோருக்கு யாரும் தொந்தரவு அளிக்க வேண்டாம்."

"அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே செல்ல வேண்டும். மக்கள் விழிப்புணர்வுடன் கொரோனாவை எதிர்கொள்ள வேண்டும்; அலட்சியம் கூடாது. மக்கள் அலுவலகங்களுக்கு செல்வதை தவிர்த்து வீட்டிலிருந்தே வேலை செய்ய வேண்டும். 22ம் தேதி ஞாயிறு அன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். 22ம் தேதி கொரோனாவுக்கு எதிரான சோதனை ஓட்டமாக இருக்கும். யாரும் நோய்த் தொற்றுக்கு ஆளாகாதீர்கள்; யாருக்கும் நோய்த் தொற்றைப் பரப்பாதீர்கள்."

"கொரோனாவை எதிர்த்து போராடி வரும் மருத்துவர்கள், பணியார்களுக்கு கைத்தட்டல் மூலம் நன்றி சொல்லுங்கள். கொரோனா வைரஸ் காரணமாக ஏழைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது. வேலையில்லாத நாள்களில் பணியாளர்களுக்கு நிறுவனங்கள் சம்பளத்தை பிடிக்க வேண்டாம். அச்சத்தில் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களை வாங்கிக் குவிக்க வேண்டாம். நாட்டு மக்கள் தங்களுக்கு தாங்களாகவே ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துக் கொள்ள வேண்டும்."

"தேவையின்றி மருத்துவமனைகளில் குவிந்து பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம். பொருளாதார மந்த நிலையை போக்குவதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க உறுதி மற்றும் கட்டுப்பாடு மிக முக்கியமான தேவை. கொரோனாவை தடுத்து நமது தேசத்தின் வலிமையை உலகத்துக்கு நிரூபிப்போம்."

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

NARENDRAMODI, SPEECH, CORONAVIRUS