Darbar USA

‘காரில் கோயிலுக்கு போன குடும்பம்’!.. ‘அசுரவேகத்தில் வந்த பேருந்து’.. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த கோரவிபத்து..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கார் மீது பேருந்து மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘காரில் கோயிலுக்கு போன குடும்பம்’!.. ‘அசுரவேகத்தில் வந்த பேருந்து’.. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த கோரவிபத்து..!

கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள உதயம்பேரூரை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவர் தனது குடும்பத்தினருடன் செர்த்தலா அருகே உள்ள கோவிலுக்கு காரில் சென்றுள்ளார். அதிகாலை சுமார் 5.45 மணியளவில் வைக்கம்-செர்த்தலா சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த பேருந்து கார் மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில் விஸ்வநாதன் உட்பட நான்கு பேர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விபத்தில் உயிரிழந்தவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்து அதிவேகத்தில் வந்ததால் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. காரில் கோயிலுக்கு சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் பேருந்து மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ACCIDENT, KILLED, KERALA, BUS, CAR