'வரலாறு' காணாத உச்சத்தில் 'வேலை இழப்பு...' அடுத்தடுத்த நாட்களை 'கேள்விக் குறியுடன்'... 'நகர்த்தும் லட்சக்கணக்கான இந்தியர்கள்...'

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவில் 3 வது கட்டமாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கால் வேலை இழப்பு வரலாறு காணாத உச்சத்தில் உள்ளதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

'வரலாறு' காணாத உச்சத்தில் 'வேலை இழப்பு...' அடுத்தடுத்த நாட்களை 'கேள்விக் குறியுடன்'... 'நகர்த்தும் லட்சக்கணக்கான இந்தியர்கள்...'

இந்தியாவின் ஊரடங்கு பாதிப்பால் 11.4 கோடிக்கும் அதிகமான வேலை இழப்புகள் ஏற்படும் என இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையத்தின் (சி.எம்.ஐ.இ) புள்ளிவிவரம் கூறுகிறது.

கடந்த மார்ச் 24 ம் தேதி விதிக்கப்பட்ட ஊரடங்கால் கடைகள், தொழிற்சாலைகள் மற்றும் சேவைகள், சுற்றுலா, உணவகங்கள் மற்றும் பொது போக்குவரத்து போன்றவை முடங்கியது. இடம்பெயர்ந்த லட்சகணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்காக முக்கிய நகரங்களை விட்டு வெளியேறி வருகின்றனர்.

கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின் மே 3 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் நாட்டின் வேலையின்மை விகிதம் 27.1 சதவீதத்தைத் தொட்டு உள்ளது. இதுவே மிக உயர்ந்த விகிதம் ஆகும்.

இந்தியாவின் தொழிற்சாலை உற்பத்தி 16.7 சதவிகிதம் சுருங்கியிருப்பதாக மத்திய புள்ளிவிவர அலுவலகத்தின் தரவு மே 12 அன்று காட்டியது. ஏப்ரல் 21 ம் தேதி தொழிலாளர் வேலையின்மை விகிதம் 35.4 சதவீதத்திலிருந்து மே 3 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 36.2 சதவீதமாக உயர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

மே 12 அன்று வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, உற்பத்தி 20.6 சதவீதம் சுருங்கியது, மின்சார உற்பத்தி 6.8 சதவீதம் குறைந்துள்ளது.

ஏப்ரல் 26 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், நாட்டின் வேலையின்மை விகிதம் 21.1 சதவீதமாக இருந்தது, இது முந்தைய வாரத்தில் பதிவு செய்யப்பட்ட 26.2 சதவீத வீதத்தை விட கணிசமாகக் குறைவு என்று இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மைய தரவு தெரிவிக்கிறது