'ரோட்ல போலீஸ் நிற்பாங்க, வா காட்டுக்குள்ள போவோம்...' 'நண்பரிடம் உதவி கேட்ட சிறுமி...' காட்டுக்குள் வைத்து 9 பேர் சேர்ந்து செய்த கொடூரம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஜார்கண்ட் மாநிலத்தில் ஊரடங்கின் போது, நண்பரிடம் உதவி கேட்ட 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது.

'ரோட்ல போலீஸ் நிற்பாங்க, வா காட்டுக்குள்ள போவோம்...' 'நண்பரிடம் உதவி கேட்ட சிறுமி...' காட்டுக்குள் வைத்து 9 பேர் சேர்ந்து செய்த கொடூரம்...!

சீனாவின் உஹான் மாகாணத்திலிருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் இதன் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 24.03.2020 தேதி மாலை 6 மணி முதல் 21 நாட்களுக்கு 144 ஊரடங்கு சட்டம் அமுலுக்கு வந்தது. மேலும் மாலை 6 மணி முதல் இரயில், பேருந்து சேவைகள் நிறுத்தப்படும் எனவும் அரசு குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த 24ஆம் தேதி மாலை 16 வயதுடைய சிறுமி ஊரடங்கு காரணமாக வீட்டிற்கு செல்ல போக்குவரத்து இல்லாமல் தவித்துள்ளார். உடனே உதவிக்காக தனது ஆண் நண்பருக்கு போன் செய்ததாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையை பயன்படுத்த நினைத்த அந்த நபர், 'ஊரடங்கால் நாம் சாலை வழியாக போக முடியாது போலீஸ் இருப்பார்கள், காட்டுப் பாதையில் போகலாம்' என சொல்லி அந்த பெண்ணை யாரும் நடமாடாத காட்டுவழி பாதைக்கு கூட்டிச் சென்றுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் தன்னுடன் 8 ஆண் நண்பர்களையும் அழைத்து வந்துள்ளார். காட்டுவழி பாதையை அடைந்த உடன் சிறுமியின் ஆண் நண்பரும் அவருடைய 8 நண்பர்களும் சேர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, சிறுமியை அப்படியே விட்டு சென்றுள்ளனர்.

இதையடுத்து போலீசார் சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் பாலியல் வன்கொடுமை பிரிவில் வழக்கு பதிய செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

WILD