‘தாயைப் பார்த்து ஆற்றுக்குள் குதித்த குழந்தைகள்..’ நெஞ்சை உலுக்கும் புகைப்படம்..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பீகாரில் தாயைப் பார்த்து ஆற்றுக்குள் குதித்த குழந்தைகள் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘தாயைப் பார்த்து ஆற்றுக்குள் குதித்த குழந்தைகள்..’ நெஞ்சை உலுக்கும் புகைப்படம்..

பீகார் மாநிலத்தின் ஷிடால்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராணி தேவி என்பவர் தன்னுடைய 4 குழந்தைகளுடன் அருகில் உள்ள ஆற்றுக்குக் குளிக்கச் சென்றுள்ளார். கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அப்போது ஆற்றில் கடுமையான நீரோட்டம் இருந்துள்ளது. இதில் ராணி தேவியின் அர்ஜுன் என்ற 3 வயது குழந்தை தவறி தண்ணீரில் விழுந்துள்ளது.

குழந்தையைக் காப்பாற்றுவதற்காக ராணிதேவியும் உடனடியாக ஆற்றுக்குள் குதித்துள்ளார். தாய் ஆற்றுக்குள் குதிப்பதைப் பார்த்து உடன் இருந்த மற்ற மூன்று குழந்தைகளும் ஆற்றுக்குள் குதித்துள்ளனர். இதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்க முயற்சித்துள்ளனர். இதில் ஒரு குழந்தையும், ராணி தேவியும் மட்டுமே உயிர் பிழைத்த நிலையில் மற்ற 3 மூன்று குழந்தைகளும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட அர்ஜுனின் உடல் மீட்கப்பட்டுள்ளது. தற்போது இணையத்தில் பரவிவரும் இந்தக் குழந்தையின் புகைப்படம் பார்ப்பவர்கள் அனைவரையும் உலுக்கியுள்ளது. இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து பலரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

BIHARFLOODS, DISTURBINGPHOTO