பிரியாணியில் பீஸ் இல்லாததால் இளம்பெண் கொலையா?..சென்னையில் பரபரப்பு!

Home > தமிழ் news
By |

சென்னையில் பிரியாணியில் கறி இல்லாததால் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரியாணியில் பீஸ் இல்லாததால் இளம்பெண் கொலையா?..சென்னையில் பரபரப்பு!

சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட் பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் பெண் ஒருவர் ரத்தவெள்ளத்தில் இருந்ததைப் பார்த்த மக்கள் அதிர்ச்சியாகி உடனே போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் கழுத்தில் வெட்டுக்காயத்துடன் இறந்துகிடந்த பெண்ணை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கொலை செய்யப்பட்டுக்கிடந்த பெண் யார், கொலை செய்தவர் யார் என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை தொடர்பாக போலிஸார் நடத்திய விசாரணையில், கோயம்பேடு மார்க்கெட்டில் நள்ளிரவில், ஒரு நபருடன் வந்த பெண் அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் இருவரும் சேர்ந்து பிரியாணி சாப்பிட்டுள்ளனர்.

அப்போது அப்பெண்ணுக்கும் கூட வந்த நபருக்கும் இடையே பிரியாணியில் கறி இல்லாதது தொடர்பாக சண்டை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து இன்று அதிகாலை அப்பெண் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் அப்பகுதியில் இறந்துகிடந்துள்ளார்.

இந்நிலையில் பிரியாணியில் கறி இல்லாத சண்டையில் பெண் கொலை செய்யப்பட்டாரா இல்லை வேறு ஏதும் காரணம் உள்ளதா என்கிற கோணத்தில் விசாராணை நடத்திவருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்து பார்த்ததில் முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.

CHENNAI, WOMAN, BIRYANI, MURDER, BIZARRE