Aan Devadhai BNS Banner

விசாரணையின்றி, திருமணமான பெண்ணை காதலருடன் அனுப்பிய காவலர்!

Home > தமிழ் news
By |
விசாரணையின்றி, திருமணமான பெண்ணை காதலருடன் அனுப்பிய காவலர்!

ராமநாதபுரத்தில் உள்ள ஏர்வாடி காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் சரவணன் என்பவர் திருமணமான பெண்ணை  சரியாக விசாரிக்காமல், அந்த பெண் விரும்பிய காதலருடன் அனுப்பி வைத்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 

 

இரண்டு வருடங்களுக்கு முன்பாக திருமணம் ஆன, பெண் ஒருவர், மீன் பிடித் தொழில் நிமித்தமாக சவுதிக்கு சென்ற நிலையில் வேறு ஒரு இளைஞருடன் ஏற்பட்ட தொடர்பினால் காணாமல் போனார். அவரை தேடி கண்டுபிடித்து அழைத்து வந்த நிலையில், அந்த பெண் திருமணமானவர் என்பதை அறியாமல் அப்பெண் விரும்பிய காதலருடன் அனுப்பி வைத்ததாக  உதவி ஆய்வாளர் சரவணன் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளதை அடுத்து அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

POLICEMEN, SUBINSPECTOR, RAMANATHAPURAM, TAMILNADU