உலக சாதனையாளர் விருது வாங்கும் தொல்.திருமா!

Home > தமிழ் news
By |
உலக சாதனையாளர் விருது வாங்கும் தொல்.திருமா!

அம்பேத்கரை முன்னுதாரணமாகக் கொண்டு இயங்கும் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி. இக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சமூக செயல்பாடுகளிலும் ஆர்வமுடையவர். எளிய உடை, நடையில் எளிய உரை நடையில் பேசக் கூடிய திருமாவளவன், கடந்த சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த், வைகோ உள்ளிட்டோர் பங்கேற்ற மக்கள் நலக் கூட்டணியில் பங்கேற்றிருந்தார்.

 

மரம் நடும் விழா போன்ற விஷயங்களில் ஆர்வம் காட்டி வந்த திருமாவளவன் அண்மையில் பனை மர விதைகளை நட்டு வைக்கும் விழாவில் பங்கேற்றார். இதில் பங்கேற்று ஒரே நாளில் 2.68 லட்சம் பனை விதைகளை விதைத்ததால், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனை பாராட்டும் வகையில், Universal Achievers Book of Records சார்பில் உலக சாதனையாளர் விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்படுகிறார்.

 

அழிந்து வரும் நிலையில் இருக்கும் பனைமர விதைகளை ஒரே நாளில் லட்சக் கணக்கில் விதைத்த இந்த செயலால் பிற்காலத்தில் மீண்டும் பனை மரங்களின் இருப்பு இயற்கைக்கு ஒரு வரமாக அமையும் என்பதால் அதை ஊக்குவிக்கும் வகையில் இந்த சாதனையாளர் விருது வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.