96 BNS Banner
Ratsasan BNS Banner

பெற்ற குழந்தையை ஏரியில் வீசிய பெண் கூறும் அதிர்ச்சி காரணம்!

Home > தமிழ் news
By |
பெற்ற குழந்தையை ஏரியில் வீசிய பெண் கூறும் அதிர்ச்சி காரணம்!

வேளச்சேரியைச் சேர்ந்த பெண் ஒருவர் பெற்ற குழந்தையை ஏரியில் தூக்கி வீசிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.வேளச்சேரியைச் சேர்ந்த வெங்கண்ணனின் மனைவி உமா, திருமணம் ஆகி 2 வருடங்கள் ஆகிய நிலையில் தங்களுக்கு பிறந்த சர்விக் எனும் பெற்ற குழந்தையை,  ஏரியில் வீசிக் கொன்றுள்ளது தெரியவந்துள்ளது. 

 

பின்னர் அந்த அளவுக்கு என்னதான் பிரச்சனை என்று பலரும் குழம்ப, பதற்றமடைய வைக்கும்படியாக வந்திருக்கும் பதில் இதுதான்.  குழந்தைக்குப் பால் கொடுக்கவியலாத அளவில் கடுமையான மார்பக வலிகளுடன் இருந்ததால் இப்படி செய்துவிட்டதாகவும் தன்னை கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என்றும் அழுதுள்ளார் அந்த பெண். 


உண்மையில் பெற்ற குழந்தையை தூக்கி வீசும் அளவுக்கு இப்படியான வலிகளுடன் பெண்கள் சிலர் இருக்கிறார்களா என்பது ஒரு பக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்து கேள்வியாக இருக்க, இன்னொரு பக்கம் அதற்கான உளவியல் காரணங்கள்,  பெரிபெரல் மேட்னெஸ் என்று  சொல்லக்கூடிய ஹார்மோன் குறைபாடு, தூக்கமின்மை உள்ளிட்ட காரணிகளும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. எனினும் பச்சிளம் குழந்தையைக் கொன்றதற்கான உமா கைது செய்யப்பட்டார். 

BABY, WOMEN, MOTHER, CHILD, MOTHERTHROWSBABY, TAMILNADU