தொடரும் பாலியல் வன்மம்: 3-வது மாடியிலிருந்து விழுந்து இளம்பெண் தற்கொலை!

Home > தமிழ் news
By |
தொடரும் பாலியல் வன்மம்: 3-வது மாடியிலிருந்து விழுந்து இளம்பெண் தற்கொலை!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நேபாளியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணை இரு இளைஞர்கள் கூட்டாக பலாத்கார துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதை தாளாமல், அந்த இளம் பெண் மூன்றாவது மாடியில் இருந்து ஆடைகளற்ற நிலையில் விழுந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

 

ஜெய்ப்பூரில் இருந்து 18 கி.மீ தொலைவில் இருக்கும், மெஹேனா நகரைச் சேர்ந்த 19 வயது லோகேஷ் சைனி மற்றும் 24 வயது கமல் சைனி இருவரும் இந்த பாலியல் வன்மத்தில் ஈடுபட்ட குற்றத்துக்காகவும், பெண்ணின் தற்கொலைக்கு காரணமாக இருந்த குற்றத்துக்காகவும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

SEXUALABUSE, JAIPUR