கொலை மிரட்டல் புகார் - நடிகர் கருணாகரன் விளக்கம்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

நடிகர் கருணாகரன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் பொதுநலன் கருதி. இந்த படத்தை ஜியோன் இயக்க ஏவிஆர் பிலிம்ஸ் சார்பாக ஏவிஆர் அன்புவேல்ராஜன் தயாரித்திருந்தனர்.

Karunakaran clarifies on Dead threaten case against him

இந்நிலையில் நடிகர் கருணாகரன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தயாரிப்பாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக  தயாரிப்பாளர் தரப்பிலிருந்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து Behindwoods சார்பாக கருணாகரனிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, அவர்கள் விளம்பரத்திற்காக இது போன்று செய்துள்ளதாக தெரிவித்தார்.

தற்போது இதுகுறித்து முழுமையான விளக்கத்தை அவர் அளித்துள்ளார்.  'பொதுநலன் கருதி' திரைப்பட இயக்குநர் சீயோன் மற்றும் அதன் இணைத் தயாரிப்பாளர் என்னைப் பற்றிச் சொல்லும் குற்றச்சாட்டுகள் முழுவதுமே உண்மை இல்லை.

படத்தின் ஆடியோ ரிலீஸ் குறித்து பிப்ரவரி 1 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு சுமார் ஒன்பது மணிக்கு தான் என்னிடம் தெரிவித்தனர். கால அவகாசம் குறைவாக இருந்ததால் முன்னதாக ஒப்புக்கொண் பணிகளை ஒதுக்கி வைக்க முடியவில்லை.

இவற்றையெல்லாம தெளிவாக இயக்குநரிடமும் இணை தயாரிப்பாளரிடமும் கூறியிருந்தேன். படப்பிடிப்பு பணிகள் முடிந்து சென்னைக்கு வந்ததே பிப்ரவரி 3 ஆம் தேதிதான். நான் ஏதோ வேண்டுமென்றே ஆடியோ ரிலீஸுக்கு வரவில்லை என்று அவர்கள் என் மீது குறை சொல்கிறார்கள். அது உண்மையில்லை.

செலிபிரிட்டி ஷோ முடிந்து அவர்கள் அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருக்கும் வழியில் கருணாகரனால் அனுப்பப்பட்ட மர்ம நபர்கள், நீ எப்படி கருணாகரனைக் குறை சொல்லலாம் என தாக்க முயற்சித்தனர் என்று படத்தின் டீசர் வெளியீட்டின் அன்று மிரட்டியதாக புகார் கொடுத்திருக்கிரார்கள்.

எனக்கும் எந்தக் கந்துவட்டிக் காரருக்கும் தொடர்பு ஏதும் இல்லை. ஏனெனில் நான் அப்படி வளரவில்லை.

எனது தந்தை திரு. காளிதாஸ் தேசத்தின் பாதுகாப்புக்காக உழைக்கும் மத்திய அரசின் முக்கிய துறையில் பணியாற்றிய விருது பெற்றவர். இவர்கள் குறிப்பிட்டிருப்பது போன்ற வழிகளில் நான் வளர்க்கப்படவில்லை. கடனால் பாதிக்கப்பட்ட பல விவசாயிகளுக்கும் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களும்  உதவி செய்திருக்கும் என்னைக் கந்துவட்டிக்கும்பலுடன் தொடர்புபடுத்தி பேசுவது வேதனை அளிக்கிறது.

குறும்படங்களின் மூலம் வெளிச்சத்துக்கு வந்த நான் புதுமுக இயக்குநர்களுக்கு ஆதரவாக இருக்க மாட்டேனா ?

பொது நலன் கருதி திரைப்படம் வெற்றியடைய வாழத்துகிறேன். என்றார்.

Karunakaran clarifies on Dead threaten case against him

People looking for online information on Karunakaran, Pothu Nalan Karudhi, Santhosh Prathap will find this news story useful.