செல்ஃபி சர்ச்சை - நடிகைக்கு கார்த்தி நறுக் பதில்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

நடிகர் சிவக்குமாரின் செல்ஃபி விவகாரத்தை கிண்டலடிக்கும் விதமாக நடிகை கஸ்தூரி செய்த விஷயத்தால் நடிகர் கார்த்தி கோபமடைந்தார்.

Actor Karthi gets angry on Kasthuri over Sivakumar's Selfie Controversy

கே.சி.சுந்தரம் இயக்கத்தில் ஆனந்த் நாக், அஞ்சு குரியன், சதீஷ் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள ‘ஜூலை காற்றில்’ திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா இன்று (மார்ச்.4) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் கார்த்தி, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிலையில், விழாவை தொகுத்து வழங்கிய நடிகை கஸ்தூரி, நடிகர் கார்த்தியை பேச அழைத்தார். அப்போது, கையில் செல்போனை வைத்து கார்த்தி இங்க வாங்களேன்.. நம்ம ஒரு செல்ஃபி எடுத்துக்கலாம் என்றார். உங்க அப்பா இல்ல.. அதனால அவசரமா ஒரு செல்ஃபி எடுத்துக்கலாம் என கஸ்தூரி நக்கலாக பேசினார்.

இதனால் கடும் கோபமடைந்த நடிகர் கார்த்தி, இது தேவையில்லாத ஒரு விஷயம் என முகத்தை திருப்பிக் கொண்டு பேச ஆரம்பித்தார். கார்த்தி பேசுகையில், ‘செல்ஃபி என்பதற்கே மரியாதை இல்லாமல் போய்விட்டது. கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்கறது இல்ல. முகத்துக்கு முன்னால் கேமராவை கொண்டு வந்து முன்னால் ஒரு ப்ளாஷ் பின்னால் ஒரு ப்ளாஷ் என கண்ணில் பட்டால் என்ன ஆகுறது. ஒரு விவஸ்தையே கிடையாது என்றார்.

ஒரு வார்த்தை கேட்டுட்டு ஃபோட்டோ எடுக்கணும் என்ற மரியாதை கூட தெரியாத அளவுக்கு ஆயிட்டோமா என வருத்தமாக உள்ளது என்றார். இது மாதிரி ஏதேனும் மேடைகளில் சொன்னால் தான் உண்டு, வேரு எங்கும் சொல்ல முடியாது என்றார். பின் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

Actor Karthi gets angry on Kasthuri over Sivakumar's Selfie Controversy

People looking for online information on July Kaatril Audio Launch, Karthi, Kasthuri, Selfie Controversy, Sivakumar will find this news story useful.