''ஜெய் ஜக்கம்மா !'' - மோடியின் அறிவிப்பு குறித்து பிரபல தயாரிப்பாளர் கருத்து

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனையடுத்து பிரதமர் நரேந்திரமோடி நாடுமுழுவதும் இன்று இரவு 12 மணி முதல் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவை அறிவித்துள்ளார்.

அதன் படி இந்த 21 நாட்களுக்கு மக்கள் வீட்டை விட்டு வெளியில் வருவதை தவிர்க்கவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அவரது இத்தகைய நடவடிக்கைக்கு எதிர்கட்சிகள் கூட ஆதரவு தெரிவித்து வருகின்றன. கொரோனா தாக்கம் உச்சத்தில் இருக்கும் இந்நேரத்தில் இது சரியான நடவடிக்கை என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில், ''ஜெய் ஜக்கம்மா! மருந்து கண்டுபிடிச்சதுக்கு அப்புறம் நடுராத்திரி 12 மணிக்கு கூட சுடுகாட்டுக்கு போய்ட்டு வரலாம். அதுவரைக்கும் அந்த கோட்ட தாண்டி வந்துராத, வந்தா செத்துருவ!  #கைப்புள்ளமேலசத்தியம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

கொரோனா வைரஸ் பற்றிய நரேந்திர மோடியின் அறிவிப்பு குறித்து தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கருத்த�

People looking for online information on Coronavirus, Narendra Modi, SR Prabhu will find this news story useful.