வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் நடிகர் பிருத்வி ராஜ் ... ஃபோட்டோ பகிர்ந்து மனைவி உருக்கம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் பிருத்வி ராஜ் நடிப்பில் வெளியான 'ஐயப்பனும் கோஷியும்' திரைப்படம்  ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.  இதனையடுத்து அவர் 'ஆடுஜீவிதம்' படத்தில் நடித்து வருகிறார்.

Prithviraj's wife Supriya Menon shares a family pic and gets emotiional | பிருத்விராஜ் மனைவி குடும்பப் படம் பகிர்ந்து உருக்கமான பதிவு

இந்த படத்தின் படப்பிடிப்பு ஜோர்டான் நாட்டில் நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நிகழும் கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக பிருத்விராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் அந்த நாட்டிலேயே சிக்கித் தவிக்கும் நிலையுள்ளது.

இந்நிலையில் நடிகர் பிருத்வி ராஜின் மனைவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், ''ஒவ்வொரு நாளும் என் மகள் 'எப்போ இந்த லாக்டவுன் முடியும் ? அப்பா எப்போ வருவாங்க ?' என்று கேட்கிறாள். இப்பொழுது நானும் எனது மகளும் அவரை காண காத்திருக்கிறோம்'' என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதனுடன் தனது குடும்ப புகைப்படத்தையும் அவர் இணைத்துள்ளார்.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

Prithviraj's wife Supriya Menon shares a family pic and gets emotiional | பிருத்விராஜ் மனைவி குடும்பப் படம் பகிர்ந்து உருக்கமான பதிவு

People looking for online information on Aadujeevidham, Coronavirus lockdown, Prithviraj will find this news story useful.