BIG BREAKING : ஐஸ்வர்யா ராய்க்கு பிறகு மணிரத்னம் படத்தில் இணைந்த லேடி சூப்பர் ஸ்டார்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'செக்கச்சிவந்த வானம்' படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் மணிரத்னம் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலை படமாக்கவிருக்கிறார். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் நந்தினி மிக முக்கியமான வேடத்தில் நடிக்கவிருக்கிறாராம்.

Nayanthara to act in Maniratnam and Vikram's Ponniyin Selvan

மேலும் இந்த படத்தில் விக்ரம் முதன்மை வேடத்தில் நடிக்கிறாராம். இந்த படத்துக்கு அபியும் நானும், சர்வம் தாளமயம் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் குமாரவேல் இந்த படத்தின் திரைக்கதை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

எங்களுக்கு கிடைத்த தகவலின் படி இந்த படத்தில் நயன்தாரா நடிக்கவிருக்கிறாராம். அந்த வேடம் சோழர் நாட்டு இளவரசியான குந்தவியின் வேடம் என்று கூறப்படுகிறது. நயன்தாரா தற்போது விஜய்யுடன் பிகில் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Nayanthara to act in Maniratnam and Vikram's Ponniyin Selvan

People looking for online information on Maniratnam, Nayanthara, Ponniyin Selvan, Vikram will find this news story useful.