விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களின் வெற்றியை தொடர்ந்து ஏ.ஆர். ரகுமான், சிம்பு மற்றும் கௌதம் மேனன் ஆகிய மூவர் கூட்டணி அடுத்து இணையும் படத்திற்கு ‘வெந்து தணிந்தது காடு’ என பெயரிடப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது.
அதே வேளையில் 'அயலான்', 'டாக்டர்' படங்களை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திக்கேயன் நடிக்கும் புதிய படம் 'டான்'. இந்தப் படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் தயாரிக்கிறது. இப்படத்தை அட்லியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த சிபி சக்ரவர்த்தி இயக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஆக்ரா, கோயமுத்தூர், பொள்ளாச்சி பகுதிகளில் நடைபெற்ற பின் சென்னையில் தற்போது நடந்து வருகிறது. இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் விரைவில் வெளியாக உள்ளது. டியூனி ஜான் இந்த படத்தின் போஸ்டரை வடிவமைக்கிறார். இவர் புஷ்பா, ஜகமே தந்திரம், மாறன் படங்களின் போஸ்டரை வடிவமைத்தவர் ஆவார்.
இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கேமியோவாக இயக்குனர், நடிகர் கௌதம் வாசுதேவ் மேனன் நடிக்க இருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன. 'டாக்டர்' படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். இவர்களுடன் S J சூர்யா, சிவாங்கி, ஆர்.ஜே.விஜய், முனிஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கட் ஆகியோரும் நடிக்கிறார்கள்.