www.garudavega.com

பிக்பாஸ் ரசிகர்களுக்கு நல்ல செய்தி... நிவர் புயல்... போட்டியாளர்கள் பற்றிய முக்கிய அப்டேட்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது 50 நாட்களை கடந்த நிலையில் தற்போது நடந்து வரும் போன் டாஸ்க் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் நிவர் புயல் காரணமாக ஏற்பட்டிருந்த கடுமையான மழையில பிக்பாஸ் வீட்டின் கார்டன் ஏரியா தண்ணீரால் நிறைந்தது.

biggboss tamil 4 new update after nivar cycloneபிக்பாஸ் ரசிகர்களுக்கு நல்ல செய்தி

ஆனால் அதற்குள் பலரும் பிக்பாஸ் வீடு தண்ணீரில் மூழ்கி விட்டது, போட்டியாளர்கள் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும், பிக்பாஸ் நிகழ்ச்சி நிறுத்தப்படுமா என்றும் கேள்விகள் எழுப்பினர். ஆனால் இவற்றில் எதுவும் உண்மை இல்லை. பிக்பாஸ் வீட்டின் கார்டன் ஏரியாவில் நுழைந்த நீரினால் போட்டியாளர்கள் விஜய் டிவியின் நிர்வாகத்துக்கு உட்பட்ட வி.ஐ.பி ரூம்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். பிக்பாஸ் வீட்டில் தண்ணீரை வெளியேற்றும் பணிகள் முழு வீச்சில் நடந்து வந்த நிலையில் போட்டியாளர்கள்  மறுபடியும் பிக்பாஸ் வீட்டுக்குள் அழைத்து வரப்பட்டுள்ளனர். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி தடையில்லாமல் தொடரும் என்பது தற்போது தெளிவாகியுள்ளது.

பிக்பாஸ் ரசிகர்களுக்கு நல்ல செய்தி... நிவர் புயல்... போட்டியாளர்கள் பற்றிய முக்கிய அப்டேட்..! வீடியோ

Tags : Biggboss, Nivar

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Biggboss tamil 4 new update after nivar cycloneபிக்பாஸ் ரசிகர்களுக்கு நல்ல செய்தி

People looking for online information on Biggboss, Nivar will find this news story useful.