www.garudavega.com

அவங்க 'அழுததை' பார்த்து எல்லாரும் பதறுனாங்க... ஒருத்தரு மட்டும் கலாய்க்கும் நெட்டிசன்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று பிக்பாஸ் வீட்டில் அரச குடும்பம், அரக்கர் குடும்பம் டாஸ்க் முடிந்ததும் பிக்பாஸ் ஒரு குண்டை தூக்கி போட்டார். அதாவது இனி மளிகை பொருட்கள் எல்லாம் அளவாகத்தான் கொடுக்கப்படும். அதேபோல கேஸ், தண்ணீர் போன்றவற்றையும் சிக்கனமாக தான் பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இதைக்கேட்ட போட்டியாளர்கள் இனிமே எல்லாம் இப்படித்தானா என ஜெர்க் ஆகினர்.

BB 4 Tamil: VJ Archana Chandhoke cried in Bigg Boss House

தொடர்ந்து இதுகுறித்து சிலபல சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்ட போட்டியாளர்கள் அடுத்த கட்ட வேலைகளை பார்க்க துவங்கினர். ஆஜித், கேப்ரியலா உள்ளிட்டோர் டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்க திடீரென கிச்சனில் இருந்த அர்ச்சனா அழ ஆரம்பித்தார். யாரும் சண்டை கூட போடலையே அப்புறம் என்ன காரணமா இருக்கும்? என அனைவரும் அவரிடம் சென்று சமாதானம் செய்து அழுகைக்கான காரணம் குறித்து கேட்டனர்.

மளிகை பொருட்கள் குறைவாக கொடுத்தால் அனைவருக்கும் சமைத்து நன்றாக கொடுக்க முடியாது என ஒரு குடும்ப தலைவியின் ஆதங்கத்தை எடுத்துரைத்தார். இதைக்கேட்ட அனைவரும் பரவால்ல விடுங்க என அவரை சமாதானம் செய்தனர். அவ்வளவு களேபரமாக கிச்சன் மாறியும் கூட ஆஜித் இருந்த இடத்தை விட்டு நகரவில்லை. நமக்கு சாப்பாடு தான் முக்கியம் என அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் தம்பி அங்க அவ்ளோ பிரச்சினை போய்ட்டு இருக்கு இப்படி கூலா சாப்பிட்டுட்டு இருக்கீங்க? என அவரை கலாய்த்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

BB 4 Tamil: VJ Archana Chandhoke cried in Bigg Boss House

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.