தமிழகத்தில் தேர்தலையொட்டி திரையரங்க காட்சிகள் ரத்து

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளதையொட்டி திரையரங்க காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக திரையரங்க உரிமையாளர்கள் சங்க செயலாளர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.

All movie theatres to remain closed tomorrow April 18 – Election Day

நாடாளுமன்ற தேர்தல் கடந்த 11ம் தேதி முதற்கட்டமாக நடைபெற்றதைத் தொடர்ந்து தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் இரண்டாம் கட்டமாக நாளை ஏப்.18ம் தேதி காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் தேர்தலை முன்னிட்டு 100% வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்ற நோக்கில், தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் நாளை (ஏப்.18) பகல் நேர காட்சிகள் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், இரவு நேர காட்சிகள் வழக்கம் போல் திரையிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

All movie theatres to remain closed tomorrow April 18 – Election Day

People looking for online information on Lok Sabha Election will find this news story useful.