'Emergency அனுமதி பெற்று'... 'ஜனவரியில் முதல் Batch தடுப்பூசி!'... 'பிரபல நிறுவனம் அதிரடி அறிவிப்பு!!!'...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

'Emergency அனுமதி பெற்று'... 'ஜனவரியில் முதல் Batch தடுப்பூசி!'... 'பிரபல நிறுவனம் அதிரடி அறிவிப்பு!!!'...

சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி கிட்டத்தட்ட 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறையாமல் உள்ளது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நிறுவனங்கள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனமும் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

US Johnson & Johnsons COVID-19 Vaccine To Be Available In January

இந்த நிறுவனத்தின் தடுப்பூசியான AD26-COV2-S அமெரிக்காவில் ஆய்வு நடத்தப்பட்டு வரும் நான்காவது தடுப்பூசி ஆகும். கடந்த மாத இறுதியில் முதல் கட்ட பரிசோதனை வெற்றிகரமாக முடிந்த நிலையில், தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட தன்னார்வலர் ஒருவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து 2ஆம் கட்ட பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தெரிவித்தது.

US Johnson & Johnsons COVID-19 Vaccine To Be Available In January

இந்நிலையில் தற்போது ஜனவரி முதல் கொரோனா தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் பொது சுகாதார ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை தலைவர் ருக்ஸாண்ட்ரா டிராகியா அக்லி, தங்கள் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி அவசரகால பயன்பாட்டுக்காக வரும் ஜனவரி மாதத்தில் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்