இணையத்தில் கட்டுப்பாடு வேண்டும்... அதிரடி அறிக்கை... சொல்வது யார்?

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

சமூக பாதுகாப்பிற்காக இணையத்தில் சில மாற்றங்கள் வேண்டும் என்று ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் தெரிவித்துள்ளார்.

இணையத்தில் கட்டுப்பாடு வேண்டும்... அதிரடி அறிக்கை... சொல்வது யார்?

சமூக வலைத்தளங்கள் என்றாலே இளைஞர்களுக்கு உடனே நினைவுக்கு வருவது ஃபேஸ்புக் தளம். அத்தளத்திலிருக்கும் பயனாளர்களின் தகவல்களை பாதுகாக்க பேஸ்புக் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் அவ்வப்போது அதில் இருக்கும் கணக்குகளின் தகவல்கள், ஹேக் செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. சமீப காலமாக இன, மத அடிப்படையிலான பன்மைத்துவ தேசியவாதத்திற்கு எதிரான கருத்துக்கள், ஃபேஸ்புக்கில் அதிகம் வலம் வர தொடங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. அக்கருத்துக்களின்  தாக்கமும் பெரிதும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் 'நமது சமூகப் பாதுகாப்பிற்காக இணையப் பயன்பாட்டில் சில மாற்றங்களை கொண்டுவர வேண்டுமென்று' பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் தெரிவித்துள்ளார். 'தற்போது நமது வாழ்க்கையின் முக்கிய பகுதியாக தொழில்நுட்பம் உள்ளது. இணைய பாதுகாப்பின்மை, அரசியல் விளம்பரங்கள், அதிநவீன சைபர் தாக்குதல்கள் உள்ளிட்ட பலவற்றை குறித்து, நாம் தினம் தினம் முடிவடுக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். ஆனால், இது தனி நிறுவனத்தால் மட்டும் சாத்தியமில்லை. இணைய கட்டுப்பாட்டாளர்களும், அரசுகளும் இணையத்தில் சில மாற்றங்களை கொண்டு வருவதன் மூலம் அரசுக்கும், பயனாளர்களுக்கும் சரியான பங்களிப்பை நாம் கொடுக்க முடியும்' என்று நம்புகிறேன் என மார்க் ஜூகர்பெர்க் கூறியுள்ளார்.

மேலும், 'நான் கற்றுக் கொண்ட வரை நான்கு முக்கிய விஷயங்களில் நாம் கவனம் கொள்ள வேண்டும். தீங்கு விளைவிக்கக் கூடிய உள்ளீடுகள், தேர்தல் குறித்த உண்மைத்தன்மை, தனியுரிமை மற்றும் தரவு பெயர்வுத்திறன் ஆகியவற்றில் சில மாற்றங்களை கொண்டுவந்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்' என மார்க் ஜூகர்பெர்க் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு தலைப்பின் கீழும் எந்தெந்த மாற்றங்களை கொண்டுவர வேண்டுமென்ற முழு விளக்கத்தையும் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் மார்க் ஜூகர்பெர்க் விளக்கியுள்ளார்.

MARKZUCKERBERG, INTERNET, TECNOLOGY, SOCIALMEDIA, FACEBOOK, ELECTION