‘யாரா இருந்தாலும் அவர நல்லா பாத்துக்கணும்!’.. ‘நெகிழவைத்த டிக்டாக் பெண்ணுக்கு’.. சமூக வலைதளங்களால் நேர்ந்த சோகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தன்னை உயிருக்குயிராய் காதலித்து திருமணம் செய்துகொண்ட காதல் கணவர், தன்னை விட்டுவிட்டு வேறு ஒரு பெண்ணுடன் சென்றுவிட்டதாக டிக்டாக்கில் எடுக்கப்பட்ட பேட்டி ஒன்றில் தாலியும், பொட்டும் சகிதமாக கூறிய பெண் ஒருவர் வைரலானார்.

‘யாரா இருந்தாலும் அவர நல்லா பாத்துக்கணும்!’.. ‘நெகிழவைத்த டிக்டாக் பெண்ணுக்கு’.. சமூக வலைதளங்களால் நேர்ந்த சோகம்!

இதுபற்றி அப்பேட்டியில் பேசிய அப்பெண்,  ‘இப்பதான் லவ் பண்ணி கல்யாணம் பண்ணி முடிச்சேன். ஆனா அதுக்குள்ள என்ன திடீர்னு வேணாம்னு சொல்லிட்ட அந்த மனுஷன் வேற ஒரு பொண்ணோட போயிட்டாரு. நல்லா இருந்தா சரிதான். நான் மனசார லவ் பண்ணிட்டேன். அதனால அவர் யார் கூட இருந்தாலும் நல்லா இருக்கணும்னு சொல்லி விலகிட்டேன். யாரா இருந்தா என்ன.. அவர நல்லா பாத்துக்கிட்டா போதும்’ என்று நெஞ்சை நெகிழவைத்த அவரது பேச்சுக்கு பலரும் அவருக்கு ரசிகர்கள் ஆகினர். 

ஆனால் அடுத்த நாளே அவரை சமூகவலைதளங்களில் பலரும் நோகடிக்கும் வகையில் கேலிப் பொருளாக்கியதாகவும், இதனால் அப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்ளப் போவதாக வீடியோ வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது. 

TIKTOK, WOMAN