'ஆமா இவரு யாரை சொல்றாரு???'... 'இருக்க பிரச்சன போதாதுன்னு இதுவேறயா?!!... 'புது சந்தேகத்தை கிளப்பியுள்ள பதிவால் ரசிகர்கள் கேள்வி!'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மும்பை இந்தியன்ஸ் அணியின் துணை கேப்டன் கீரன் பொல்லார்ட் பகிர்ந்த மெசேஜ் ஒன்று தற்போது புதிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

'ஆமா இவரு யாரை சொல்றாரு???'... 'இருக்க பிரச்சன போதாதுன்னு இதுவேறயா?!!... 'புது சந்தேகத்தை கிளப்பியுள்ள பதிவால் ரசிகர்கள் கேள்வி!'...

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா காயம் காரணமாக கடந்த 4 போட்டிகளில் விளையாடாத நிலையில், துணை கேப்டன் கீரன் பொல்லார்ட் அணியை சிறப்பான முறையில் வழிநடத்தி பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் முதல் அணியாக தகுதி பெற செய்துள்ளார். இந்நிலையில்  கீரன் பொல்லார்ட் தன் இன்ஸ்டா மற்றும் டிவிட்டர் பக்கங்களில் செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Kieron Pollards Message Leaves Twitter With Conspiracy Theories

அதில் அவர், "ரகசியமாக குழிபறிக்கும் நண்பனை காட்டிலும், என்னை வெளிப்படையாக வெறுக்கும் எதிரியே எனக்கு தேவை" எனக் கூறியுள்ளார். முன்னதாக சமீபத்தில் மேற்கிந்திய தீவுகளின் குறைந்த ஓவர்கள் போட்டிகளின் கேப்டன்ஷிப் ஹைதராபாத் அணி வீரர் ஜேசன் ஹோல்டரிடம் கைமாறியது. அதனால் அந்த சம்பவத்தை குறிப்பிடும் வகையிலேயே  பொல்லார்ட் இந்த செய்தியை வெளியிட்டுள்ளார் என சிலரும், முன்பு 4 போட்டிகளில் விளையாடாமல் தற்போது மீண்டும் அணிக்கு திரும்பியுள்ள ரோகித் சர்மாவையே அவர் குறிப்பிட்டுள்ளார் என சிலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Kieron Pollards Message Leaves Twitter With Conspiracy Theories

அதிலும் சில ரசிகர்கள் பொல்லார்ட் ரோகித் சர்மாவைத்தான் குறிப்பிடுகிறார் என்பதற்கு பல சாட்சிகள் உள்ளது எனவும், பிளே ஆப்பில் அவர் விளையாடுவதை தவிர்த்தால் அப்போதுதான் ரோகித்திற்கு மும்பை இந்தியன்ஸ் அணியின் உண்மை நிலை தெரியும் எனவும் பலவாறு கமெண்ட் செய்து வருவது தற்போது புது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kieron Pollard (@kieron.pollard55) on

 

 

 

 

 

 

 

 

 

மற்ற செய்திகள்