Nadhi mobile
Maha Others

2 1/2 வருஷமா.. வீட்டின் சோபாவில் பெண்ணின் உடல்.. " இறந்ததே தெரியாம வாடகை வேற வாங்கிருக்காங்களா.?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

லண்டனில் வசித்து வந்த பெண் ஒருவர், இரண்டரை ஆண்டுகளாக இறந்து கிடந்தது, மற்ற யாருக்கும் தெரியாமல் இருந்த நிகழ்வு, பலரையும் திடுக்கிட வைத்துள்ளது.

2 1/2 வருஷமா.. வீட்டின் சோபாவில் பெண்ணின் உடல்.. " இறந்ததே தெரியாம வாடகை வேற வாங்கிருக்காங்களா.?

சுமார் 60 வயதான ஷெய்லா செலியோனே (Sheila Seleoane) என்ற பெண் ஒருவர், கடந்த பிப்ரவரி மாதம் தனது வீட்டில் உள்ள சோஃபாவில் எலும்பு கூடாக கண்டெடுக்கப்பட்டார். இது தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கிடைக்கவே, அவர்கள் வந்து சோதனை செய்தனர்.

தொடர்ந்து, அவரது பல் மருத்துவ பதிவுகள் மூலமாக அவர் ஷெய்லா தான் என்பது அடையாளம் காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஷெய்லாவின் மரணம் குறித்த வழக்கை தீர்மானிக்க விசாரணை நடைபெற்று வந்தது. பிரேத பரிசோதனை அறிக்கையின் படி, அவரது உடல் சிதைந்த நிலையில் இருந்ததால், அவரது மரணத்துக்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை. அதே வேளையில், கொலை நடந்ததற்கான காரணங்கள் மற்றும் தடயங்கள் எதுவும் இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

woman lay undiscovered in her flat for more than 2 years reports

இவை அனைத்தையும் விட, ஒரு பெண் இறந்து இரண்டரை ஆண்டுகள் ஆகியும் யாருக்கும் தெரியாமல் இருந்தது தான், பகீர் கிளப்பி உள்ளது. இது தொடர்பாக தற்போது வெளியான தகவலின் படி, ஷெய்லா கடைசியாக கடந்த ஆகஸ்ட் 2019 ஆம் ஆண்டு மருத்துவரிடம் சென்ற போது உயிருடன் காணப்பட்டார். அதன் பின்னர் யாரும் அவரை பார்க்கவே இல்லை என கூறப்படுகிறது. உறவினர் நண்பர்கள் என யாரும் ஷெய்லாவுக்கு இல்லாத நிலையில், சில நோய்களால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார்.

woman lay undiscovered in her flat for more than 2 years reports

தனியாக வசித்து வரும் ஷெய்லா, கடந்த 2019 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதத்திலேயே இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து, அதே ஆண்டில் அக்டோபர் அல்லது செப்டம்பர் மாதத்தில், ஷெய்லாவின் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள குடியிருப்பாளர்கள், ஷெய்லாவின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக அங்கு விசாரிக்க போலீசாரும் வந்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு கிடைத்த தவறான தகவலால், ஷெய்லா நலமுடன் இருப்பதாக போலீசார் கருதி உள்ளனர்.

இரு ஒரு புறம் இருக்க, ஷெய்லா தொடர்ந்து வாடகை கொடுக்காமலும் இருந்து வந்துள்ளார். இது பற்றி, சம்மந்தப்பட்ட Housing society, 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம், ஷெய்லாவின் வீட்டின் கேஸ் இணைப்பை துண்டித்துள்ளது. தொடர்ந்தும், அவர் வாடகை செலுத்தாததால், ஒப்பந்தத்தின் படி அவரது முன்பணத்தில் இருந்து வாடகை எடுத்துக் கொண்டதே தவிர, ஷெய்லாவிடம் இது பற்றி கேட்க முயற்சி செய்யவில்லை என கூறப்படுகிறது.

woman lay undiscovered in her flat for more than 2 years reports

அது மட்டுமில்லாமல், ஷெய்லாவ்வின் வீட்டில் நிறைய கடிதங்கள் வந்து கிடப்பதாகவும், அங்கிருந்தவர்கள் அடிக்கடி தெரிவித்தும் வந்துள்ளனர். இறுதியில், இரண்டரை ஆண்டுகள் ஷெய்லா வாடகை செலுத்தவில்லை என்ற பிறகு தான் சந்தேகம் வந்து அவரது வீட்டில் சோதித்து பார்த்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு, பெண் ஒருவர் இறந்து போய், எலும்பு கூடாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம், பலரையும் பீதியில் உறைய செய்துள்ளது.

WOMAN, SHEILA SELEOANE

மற்ற செய்திகள்