Naane Varuven M Logo Top

"எது, சுவத்துல இருந்து ரத்தம் கசியுதா?".. இளம்பெண் பகிரந்த வீடியோவால்.. பரபரப்பான இணையம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இளம் பெண் ஒருவர் தனது வீட்டில் உள்ள சுவரில் இருந்து ரத்தம் கசிவதாக வீடியோக்கள் வெளியிட்டு வந்த சம்பவம், பலரையும் திகிலூட்ட வைத்துள்ளது. இறுதியில் இதற்கான காரணம் என்ன என்பதும் தெரிய வந்துள்ளது.

"எது, சுவத்துல இருந்து ரத்தம் கசியுதா?".. இளம்பெண் பகிரந்த வீடியோவால்.. பரபரப்பான இணையம்!

Also Read | சஞ்சு சாம்சன் பெயரை கத்திய ரசிகர்கள்.. உடனடியா பேருந்தில் இருந்த சூர்யகுமார் செஞ்ச விஷயம்.. கிரிக்கெட் ரசிகர்கள் லைக்ஸை அள்ளிய வீடியோ!!

மேலே நாம் குறிப்பிட்ட விஷயத்தை சில அமானுஷ்யம் கலந்த திரைப்படங்களில் தான் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், சுவற்றில் இருந்து ரத்தம் வருவதாக பெண் குறிப்பிட்டிருந்த விஷயம், நெட்டிசன்கள் அனைவரையும் கடும் பதற்றத்தில் ஆழ்த்தி இருந்தது.

கலிபோர்னியா பகுதியை சேர்நதவர் Lexy Chidester. இவர் தனது வீட்டில் உள்ள குளியலறையின் சுவற்றில் இருந்து ரத்தம் கசிய ஆரம்பித்தது தொடர்பாக வீடியோ ஒன்றை சமீபத்தில் வெளியிட்டிருந்தார்.

இது தொடர்பாக வெளியான தகவலின் படி, 30 வயதாகும் லெக்சி தனது வீட்டில் உள்ள குளியலறையில் உள்ள கேபினட் ஒன்றில் இருந்து ரத்தம் போல வடிந்து கொண்டிருப்பதை கவனித்துள்ளார். இதனைக் கண்டதும் ஒரு நிமிடம் அவர் அதிர்ந்து போகவே, இதற்கான காரணம் என்ன என்பதும் அவருக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆரம்பத்தில் இதனை பெரிதாக அவர் எடுத்துக் கொள்ளவில்லை.

woman freaks out after find creepy incident in walls

ஆனால், அடுத்தடுத்து சில நாட்களில் மீண்டும் அதிக அளவில் ரத்தம் போல சுவரில் இருந்து கசிய ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது. சுவரில் இருந்து ரத்தம் கசிவது போல நடந்த சம்பவம், அவரை அதிகம் கவலை அடைய வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இது தொடர்பான வீடியோக்களையும் லெக்சி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து வந்தார். இதனைக் கண்ட பலரும் லெக்சி வீட்டில் ஏதோ அமானுஷ்யம் இருப்பதாக மிரண்டு போயினர். ஆனால், அதே வேளையில் சுவற்றுடன் இணைக்கப்பட்டிருக்கும் ஏதேனும் ஒரு பகுதி, துருப்பிடித்து இப்படி வடிவதாகவும், தங்களது வீட்டில் கூட இப்படி நடப்பதாகவும் சிலர் லெக்சி பதிவில் கமெண்ட் செய்திருந்தனர்.

woman freaks out after find creepy incident in walls

இதனையடுத்து, இதற்கான காரணம் என்ன என்பதை லெக்சி தேடும் விதமாக சில வீடியோக்களையும் அவர் பகிர்ந்திருந்தார்.  அப்படி பல கட்டமாக அவர் தேடும் முயற்சிகளை மேற்கொண்ட பின்னர், கடைசியில் இப்படி ரத்தம் போல கசிவதற்கான காரணம் என்ன என்பதும் தெரிய வந்துள்ளது.

லெக்சியின் குளியலறையில் காற்றோட்டத்திற்கான வழிகள் இல்லை என்பதால், பல ஆண்டுகளாக துருப்பிடித்த பொருள், குளிரந்த உலோகத்தில் இருந்து திரவமாக மாறி, ரத்தம் கசிவது போல மாறி வடிய ஆரம்பித்துள்ளது. இதற்கான உண்மை காரணம் தெரிய வந்த பின்னர், லெக்சியின் பதிவின் கீழ், பலரும் பல விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

woman freaks out after find creepy incident in walls

அதே வேளையில், லெக்சிக்கு இந்த விஷயம் முன்பே தெரிந்திருக்கலாம் என்றும், ஒரு எதிர்பார்ப்பு மற்றும் அமானுஷ்யத்தை ஏற்படுத்த இப்படி செய்திருக்கலாம் என்றும் சிலர் குறிப்பிட்டு வருகின்றனர்.

Also Read | "உயிரோட இருக்குறவங்கள விட இறந்தவங்க அதிகம்".. அமைதியான நகரம்.. 1000 கல்லறைகளுக்கு ஒருவர் கணக்கு.. சில்லிட வைக்கும் பின்னணி!!

WOMAN, CREEPY INCIDENT, WALLS

மற்ற செய்திகள்