‘பிரிட்டனின் கடல் கடந்த பாஸ்போர்ட் இனி செல்லாது: சீனா’!.. ‘பிரிட்டனுக்கு நேரடி விமான சேவை ரத்து செய்த நாடுகள்!’.. ஐரோப்பா வந்து செல்லும் ‘மூளைக்கார’ பயணிகள்! ஏன் தெரியுமா?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பிரிட்டனின் கடல்கடந்த பாஸ்போர்ட் இனி தங்கள் நாட்டில் செல்லாது என்று சீனா கடுமையாக தெரிவித்திருக்கிறது.

‘பிரிட்டனின் கடல் கடந்த பாஸ்போர்ட் இனி செல்லாது: சீனா’!.. ‘பிரிட்டனுக்கு நேரடி விமான சேவை ரத்து செய்த நாடுகள்!’.. ஐரோப்பா வந்து செல்லும் ‘மூளைக்கார’ பயணிகள்! ஏன் தெரியுமா?

இதன்மூலம் பிரிட்டனின் மீதான தன்னுடைய ஆத்திரத்தையும் சீனா வெளிப்படுத்தி இருக்கிறது. பிரிட்டன் மீது சீனா இப்படி கோபத்தில் கொந்தளிப்பதற்கு முக்கிய காரணம் இருக்கிறது. சீனா அறிமுகம் செய்திருக்கிற சர்ச்சைக்குரிய பாதுகாப்பு சட்டம் தான் அந்த முக்கிய காரணம்.

சீனாவின் தற்போதைய இந்த பாதுகாப்பு சட்டத்தை தொடர்ந்து பிரிட்டனின் கடல்கடந்த பாஸ்போர்ட் வைத்திருப்போருக்கு பிரிட்டன் குடியுரிமை பெற வழிவகை செய்யக்கூடிய திட்டம் பிரிட்டனில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.

இந்த பிரிட்டன் குடியுரிமை சட்டத்தின் மூலம் சுமார் 3 லட்சம் பேர் ஹாங்காங்கை விட்டு பிரிட்டன் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால்தான் சீனா ஆத்திரமடைந்து இருக்கிறது. முன்னதாக சீனா, தமது நாட்டின் உள்விவகாரங்களில் பிரிட்டன் தலையிடுவதாக குற்றம் சாட்டி வந்தது. இந்த நிலையில் தான், இனி ஞாயிறுகளில் பிரிட்டன் வெளிநாட்டு பாஸ்போர்ட்டுகளை பயண ஆவணமாக எடுத்துக்கொள்ள முடியாது என நேரடியாக தம் கோபத்தை காட்டத் தொடங்கியுள்ளது சீனா.

இதனிடையே வாழிட உரிமம் இல்லாதோர் தடைசெய்யப்பட்ட பட்டியலில் சேராத ஏதேனும் நாட்டுக்குச் சென்று அங்கு 10 நாட்கள் தனிமைப் படுத்திக் கொண்டு இருந்த பின்னர் மீண்டும் பிரிட்டனுக்கு திரும்பலாம் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

ALSO READ: இறப்பு சான்றிதழே கொடுத்தாச்சு!.. தகனம் செய்ய தயாரான மகள்!.. கடைசியி நொடியில் ‘நடந்த’ அந்த ‘வியக்க வைக்கும்’ சம்பவம்! ஆச்சரியத்தில் உறைந்த உறவினர்கள்!

இதனால் பல ‘மூளைக் காரர்கள்’ பிரிட்டனுக்கு நேரடியாக செல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு விமானத்தில் சென்று அங்கிருந்து பிரிட்டனுக்கு வர திட்டமிட்டனர். இதனால் இன்று 1 மணிக்கு மேல் சில நாடுகளில் இருந்து பிரிட்டனுக்கு நேரடி விமான சேவை தடை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்