மச்சான்! நாம கண்டிப்பா போறோம்... 30 வருடங்கள் கழித்து 'நண்பர்கள்' போட்ட பிளான்... மிகப்பெரும் துயரத்தில் முடிந்த சோகம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

30 வருடங்கள் கழித்து நண்பர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து சென்றுள்ளனர்.

மச்சான்! நாம கண்டிப்பா போறோம்... 30 வருடங்கள் கழித்து 'நண்பர்கள்' போட்ட பிளான்... மிகப்பெரும் துயரத்தில் முடிந்த சோகம்!

வியட்நாம் நாட்டின் குவாங் பிங்ஹ் மாகாணத்தில் டாங் ஹூ என்ற உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1990- ம் ஆண்டு படித்த ஒரே வகுப்பை சேர்ந்த 40 மாணவர்கள் தங்கள் பள்ளிவகுப்புகளின் 30-வது ஆண்டுவிழாவை கொண்டாட திட்டமிட்டனர். அதன்படி நண்பர்கள் அனைவரும் பேருந்து ஒன்றில் சுற்றுலா சென்றுள்ளனர்.

இதில் எதிர்பாராதவிதமாக பேருந்து கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே 13 பேர் பலியாகினர். இதுகுறித்து தவலறிந்த உள்ளூர் போலீசார் மற்றும் மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மற்ற செய்திகள்