"நாம 1 லட்சம் பேரை இழந்திருக்கிறோம்..!".. 'கல்லு மாதிரி இருந்த மனுசன்'!.. 'முதல்' முறையா 'கண்ணீருடன்' பதிவிட்ட 'ட்வீட்'!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 59 லட்சத்தைத் தாண்டியுள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 60 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. எனினும் நோயில் இருந்து 25 லட்சத்து 15 ஆயிரத்து 406 பேர் மீண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

"நாம 1 லட்சம் பேரை இழந்திருக்கிறோம்..!".. 'கல்லு மாதிரி இருந்த மனுசன்'!.. 'முதல்' முறையா 'கண்ணீருடன்' பதிவிட்ட 'ட்வீட்'!

இந்த நிலையில், அமெரிக்காவைப் பொருத்தவரை, கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் நீடித்து வருகிறது. அமெரிக்காவுக்கு அத்தபடியாக   ஸ்பெயின், பிரேசில், ஜெர்மனி, இத்தாலி, ரஷ்யா, துருக்கி, ஈரான், சீனா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

அமெரிக்காவில் மட்டும் கொரோனா வைரசால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1லட்சத்தைக் கடந்துள்ளது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17 லட்சத்து 50 ஆயிரத்தை நெருங்கியும் உள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இப்படி இருக்க, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 90 ஆயிரத்தை மட்டுமே கடந்துள்ளது. 11 லட்சத்து 56 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தற்போது சிகிச்சையில் இருந்துவருகின்றனர்.

இந்த நிலையில், “கொரோனாவால் நாம் 1 லட்சம் பேரை இழந்துவிட்டோம் என்கிற சோகமான மைல்கல்லில் நாம் நிற்கிறோம். கொரோனாவால் உயிரிழப்பை சந்தித்தவர்களின்

குடும்பத்துக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் கூறிக்கொள்கிறேன். இந்த கஷ்டமான நேரத்தில் கூட என்னுடன் இணைந்து பணியாற்றுபவர்களுக்கும் என்னுடைய அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன். கடவுள் உங்களுடன் இருப்பார்” என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் முதல் முறையாக அமெரிக்க உயிரிழப்புக்காக வருந்தி பதிவிட்டுள்ளார்.

 

மற்ற செய்திகள்