'இந்தா மறுபடியும் வந்திடுச்சுல...' ஆனா இந்த தடவ அதுல 'ஒரு வாசகம்' எழுதியிருக்கு...! - மீண்டும் தோன்றிய மர்ம தூண்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

துருக்கியில் உருவாகியுள்ள மர்ம உலோக தகட்டில் எழுதப்பட்ட சொற்றொடரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

'இந்தா மறுபடியும் வந்திடுச்சுல...' ஆனா இந்த தடவ அதுல 'ஒரு வாசகம்' எழுதியிருக்கு...! - மீண்டும் தோன்றிய மர்ம தூண்...!

கடந்த ஆண்டு நவம்பரில் அமெரிக்காவின் உட்டா பாலைவனத்தில் தென்பட்ட இந்த மர்ம உலோகப் பொருள் அதன் பின்னர் உலகின் பல்வேறு நாடுகளிலும் திடீரென தோன்றியது. மேலும் ஒரு சில இடங்களில் மறைந்தும் உள்ளது.

இந்நிலையில் மீண்டும், துருக்கி நாட்டின் தென்கிழக்கு மாகாணமான Sanliurfa என்னுமிடத்தில் மர்ம உலோகப் பொருள் உருவாகியுள்ளது. சுமார் 12,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோவில் பகுதியான Gobeklitepeல் சுமார் 3மீட்டர் உயரம் இருப்பதாக துருக்கி நாடு கூறியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் தற்போது உருவாகியுள்ள இந்த உலோகப் பொருளில் 'சந்திரனை காண வேண்டுமானால் வானத்தை பாருங்கள்' என்ற சொற்றொடர் எழுதப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்