'ஆப்கானிலிருந்து இந்தியா வந்த போன் கால்'... 'ஹலோ சொன்ன அடுத்த நொடி கேட்ட அலறல் சத்தம்'... மனைவி முன்னாடி தாலிபான்கள் செய்த கொடூரம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தாலிபான்கள் செய்யும் கொடூர சம்பவங்கள் குறித்த செய்திகள் தினந்தோறும் வெளிவந்த வண்ணம் உள்ளது.

'ஆப்கானிலிருந்து இந்தியா வந்த போன் கால்'... 'ஹலோ சொன்ன அடுத்த நொடி கேட்ட அலறல் சத்தம்'... மனைவி முன்னாடி தாலிபான்கள் செய்த கொடூரம்!

20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைத் தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், அமெரிக்க ராணுவம் முழுமையாக ஆப்கானிலிருந்து வெளியேறி விட்டது. இதனால் மக்கள் பலரும் ஆப்கானை விட்டு வெளியேறி வருகிறார்கள். பலர் நாட்டை விட்டு வெளியேற முடியாமல் இனிமேல் என்ன நடக்கப் போகிறதோ என்ற அச்சத்துடன் நாட்களைக் கடத்தி வருகிறார்கள்.

Taliban Killed My Brother For Working For US Troops: Afghan Man

இந்நிலையில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த டாக்டர் ஏ.எஸ் பாரக் என்பவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவுக்கு வந்துவிட்டார். அதே சமயம் அவரின் மொத்த குடும்பமும் காபூலில் தான் வாழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஞாயிறு அன்று இரவு காபூலிலிருந்து பாரக்கின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் அவருக்கு போன் செய்துள்ளார்கள். அப்போது போனை எடுத்த அடுத்த நிமிடமே அலறல் சத்தம் கேட்டுள்ளது.

Taliban Killed My Brother For Working For US Troops: Afghan Man

இவர் என்ன நடக்கிறது எனப் பதறிய நிலையில், அங்கு வந்த  தாலிபான்கள்  பாரக்கின் சகோதரர் குறித்துக் கேட்டுள்ளார்கள். பின்னர் மற்றொரு அறையிலிருந்த அவரை வெளியே தர தரவென இழுத்துக் கொண்டு வந்துள்ளார்கள். நீ தானே அமெரிக்காவிற்கு வேலை செய்தது என ஆத்திரத்தில் கேட்ட தாலிபான்கள், அவரது மனைவி முன்னிலையில் 6 துப்பாக்கி தோட்டாக்களால் கொடூரமாகச் சுட்டுக் கொன்றுள்ளார்கள்.

கொலை செய்யப்பட்ட டாக்டர் ஏ.எஸ் பாரக்கின் சகோதரருக்கு இரண்டு குழந்தை குழந்தைகள் உள்ளனர். பாரக்கின் சகோதரர் அமெரிக்க ராணுவத்திற்கு வேலை செய்ததைக் கண்டுபிடித்த தாலிபான்கள், அந்த தகவல்களின் அடிப்படையில் இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார்கள்.

மற்ற செய்திகள்