12 வருஷம் முன்னாடி மாயமான மகன்.. இறந்து போயிருப்பான்னு நெனச்ச தாய்க்கு.. இத்தனை நாள் கழிச்சு வந்த போன் கால்!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

12 ஆண்டுகளுக்கு முன் தனது மகன் மாயமான நிலையில், தற்போது இது பற்றி தெரிய வந்த தகவல், தாய் ஒருவரை உற்சாகம் அடைய வைத்துள்ளது.

12 வருஷம் முன்னாடி மாயமான மகன்.. இறந்து போயிருப்பான்னு நெனச்ச தாய்க்கு.. இத்தனை நாள் கழிச்சு வந்த போன் கால்!!

Also Read | முதல் ஐபிஎல் ஏலத்தில் தோனி செஞ்ச சம்பவம்.. 15 வருசமா தொட முடியாத ரெக்கார்டு.. மிரண்டு போன ரசிகர்கள்!!

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ என்னும் பகுதியை சேர்ந்தவர் Joyce Curtis. இவரது மகன் பெயர் நிக்கோலஸ். இவர் கடந்த 2000 ங்களில் தனது வேலைக்கு போன இடத்தில் திடீரென மாயம் ஆனதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதனைத் தொடர்ந்து, மகனை காணாமல் தவித்து வந்த ஜாய்ஸ், அவரது கணவருடன் சேர்ந்து புகார் ஒன்றையும் போலீஸ் நிலையத்தில் அளித்துள்ளார். இது,தொடர்பாக, போலீசாரும் நிக்கோலஸை பல இடங்களில் தேடியும் வந்துள்ளனர். அப்போது கடந்த 2010 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நிக்கோலஸ் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்த நிலையில், உடனடியாக அங்கே சென்று ஜாய்ஸ் மற்றும் அவரது கணவர் ஆகியோர் பார்த்துள்ளனர்.

Son missed 12 years ago found in france mother in joy

ஆனால், அதற்குள் நிக்கோலஸ் மீண்டும் மாயமானதாக சொல்லப்படுகிறது. இதன் பின்னர், ஆண்டுகள் பல கடந்தும் மகன் குறித்தும் தகவல் எதுவும் கிடைக்காததால் பெற்றோர்கள் இருவரும் மிகுந்த வேதனையில் இருந்துள்ளனர். இந்த நிலையில், கொரோனா தொற்று ஏற்பட்டு மகன் உயிரிழந்திருக்கலாம் என்றும் அவர்கள் முடிவுக்கு வந்துள்ளனர். இதனிடையே ஜாய்ஸின் கணவரும் கடந்த ஜூலை மாதம் இறந்து போனதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், மகன் மற்றும் கணவர் ஆகிய இருவரும் அருகே இல்லாமல் போனது பெரிய அளவில் அவரை பாதித்துள்ளது.

அப்படி ஒரு சூழலில் தான், கடந்த ஒரு சில தினங்கள் முன்பு பிரிட்டன் தூதரகத்தில் இருந்து ஜாய்ஸ்க்கு ஒரு செய்தி வந்துள்ளது. அதாவது, மகன் நிக்கோலஸ் பிரான்சில் உள்ள மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் தான். காணாமல் போன மகன் இறந்தே போனதாக கருதி வந்த ஜாய்ஸ்க்கு இந்த செய்தி, பெரிய மகிழ்ச்சியை அளித்துள்ளது.

Son missed 12 years ago found in france mother in joy

இதன் பின்னர், தொலைபேசியில் மகனிடமும் பேசியுள்ள ஜாய்ஸ், வீட்டுக்கு வருவாயா என கேட்க, நிக்கோலஸும் வருவதாக உறுதி அளித்துள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மகன் மீண்டும் இணைய உள்ள விஷயம், தாயார் ஜாய்ஸை மிகுந்த உற்சாகசத்தில் ஆழ்த்தி உள்ளது.

Also Read | 18 மணி நேரமா.. காருக்குள் இருந்த இளம்பெண்?.. மகள் அனுப்பிய திகிலூட்டும் வீடியோவை பார்த்து கதிகலங்கிய தாய்!!

FRANCE, FRANCE MOTHER, SON

மற்ற செய்திகள்