'கட்டி ஆள அவ்வளவு சொத்து இருக்கு'... 'ஆனா 15 வருஷமா கோமா'... 'பெண்ணின் குரலை கேட்டதும் நடந்த அற்புதம்'... வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

மனிதனின் ஒவ்வொரு நொடியும் நம்பிக்கை என்ற ஒற்றை சொல்லால் மட்டுமே நகர்ந்து கொண்டு செல்கிறது. அந்த நம்பிக்கை ஒரு நாள் நிச்சயம் கை கொடுக்கும் என்பதற்கு உதாரணமாக ஆச்சரியமளிக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

'கட்டி ஆள அவ்வளவு சொத்து இருக்கு'... 'ஆனா 15 வருஷமா கோமா'... 'பெண்ணின் குரலை கேட்டதும் நடந்த அற்புதம்'... வைரலாகும் வீடியோ!

சவுதியைச் சேர்ந்த இளவரசர் 'Al-Waleed bin Khalid Al-Saud'. இவர் கடந்த 2005-ம் ஆண்டு ராணுவ கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது கார் விபத்து ஒன்றில் சிக்கினார். அப்போது படுகாயமடைந்த அவருக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு அவரது உயிரானது காப்பாற்றப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக இளவரசர் கோமா நிலைக்குச் சென்றார். தீவிர மருத்துவ கண்காணிப்பிலிருந்த இளவரசரின் உடலில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சிறிது அசைவு ஏற்பட்டது.

ஆனால் அதற்குப் பின்னர் இளவரசரின் உடலில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த சூழ்நிலையில் மருத்துவ கண்காணிப்பிலிருந்த இளவரசர் Al-Waleed bin Khalid Al-Saudயிடம் பெண் ஒருவர் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த பெண், 'Hi, Didi hello, hello let me see, hi, எனக் கூற இளவரசர் தனது விரல்களை அசைகிறார். அந்த பெண் மீண்டும் பேசப் பேச, இளவரசர் மீண்டும் தனது முழு கையை சிறிதளவு உயர்த்துகிறார். சமூக வலைத்தளங்களில் வெளியான இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

Saudi Prince manages to lift his hand to woman's voice after 15 years

கோடீஸ்வரரின் வாரிசான இளவரசர்  'Al-Waleed bin Khalid Al-Saud'யின் தந்தை தனது மகன் எப்படியும் குணமடைவார் என்ற நம்பிக்கையை ஒரு போதும் கைவிடாமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்