'இந்த 20' நாடுகளில் உள்ள பயணிகள்... 'எங்க நாட்டுக்குள்ள வர தடை...' 'இருபதுல இந்தியாவும் ஒண்ணு...' - அதிரடி உத்தரவிட்ட வளைகுடா நாடு...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

மீண்டும் பரவ தொடங்கும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளில் இருந்து பயணிகள் வருவதற்குத் தடை விதித்து சவுதி அரேபியா உத்தரவிட்டுள்ளது.

'இந்த 20' நாடுகளில் உள்ள பயணிகள்... 'எங்க நாட்டுக்குள்ள வர தடை...' 'இருபதுல இந்தியாவும் ஒண்ணு...' - அதிரடி உத்தரவிட்ட வளைகுடா நாடு...!

கொரோனா வைரஸ் பரவி வரும் சூழலில் சவுதி அரேபியா தங்கள் நாட்டிக்குள் குறிப்பிட்ட 20 நாடுகளின்  பயணிகள் வர இன்று முதல் தடைவிதித்துள்ளது.

அதன்படி இந்தியா, அர்ஜென்டினா, இத்தாலி, எகிப்து, லெபனான், துருக்கி, அமெரிக்கா, ஸ்வீடன், பிரேசில், பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து,  அயர்லாந்து, போர்ச்சுகல், தென் ஆப்பிரிக்கா, , இந்தோனேசியா, பாகிஸ்தான், ஜப்பான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் இருந்து வருவோருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தி நியூஸ் இன்டர்நேஷனல் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், 'சவுதி அரேபிய மக்கள், மருத்துவர்கள், அரசு உயர் அதிகாரிகள், அவர்கள் குடும்பத்தினர் யாரேனும் தடை செய்யப்பட்ட 20 நாடுகளுக்கு கடந்த 14 நாட்களுக்கு முன் சென்று வந்திருந்தாலோ அல்லது அந்த நாட்டில் விமானத்தில் இறங்கி வேறு விமானம் மாறியிருந்தாலோ அரசின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்க வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த உத்தரவில் இருந்து அரசுத் தரப்பில் அலுவல் ரீதியாக வரும் வெளிநாட்டு அதிகாரிகள், தூதரக அதிகாரிகள், சவுதி அரேபிய மக்கள், மருத்துவர்கள் ஆகியோருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்