மனிதம் இன்னும் சாகல.. உக்ரைன் மக்கள் செஞ்ச காரியம்.. கண்ணீர் விட்டு அழுத ரஷ்ய வீரர்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சரணடைந்த ரஷ்ய வீரருக்கு உக்ரைன் மக்கள் செய்த காரியம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனிதம் இன்னும் சாகல.. உக்ரைன் மக்கள் செஞ்ச காரியம்.. கண்ணீர் விட்டு அழுத ரஷ்ய வீரர்..!

உக்ரைன் மீது ஒரு வாரத்துக்கும் மேலாக ரஷ்யா தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கு உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்ற வரும் போரில் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என பலரும் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே உக்ரைன் தலைநகர் கீவ் கைப்பற்றும் முயற்சியில் ரஷ்ய படைகள் முனைப்பு காட்டி வருகிறது. இதை தடுக்கும் முயற்சியில் உக்ரைன் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சில ரஷ்ய வீரர்கள் தங்கள் ஆயுதங்களை கைவிட்டு சரணடைந்தும் வருகின்றனர்.

இந்த நிலையில், கீவ் நகர் அருகே ரஷ்ய பாதுகாப்பு படை வீரர் தனது ஆயுதங்களை கைவிட்டு உக்ரைனிடம் சரணடைந்தார். அப்போது உக்ரைன் மக்கள், சரணடைந்த ரஷிய வீரருக்கு டீ, உணவு கொடுத்து கனிவாக நடந்துகொண்டனர். அருகில் இருந்த உக்ரைன் பெண், தனது செல்போனில் ரஷ்ய வீரரின் அம்மா செல்போன் எண்ணை பெற்று அவருக்கு போன் செய்தார்.

அவரது தாயார் பேசத்தொடங்கியதும் போனை ரஷ்ய வீரரிடம் அப்பெண் கொடுத்தார். தனது அம்மாவிடம் பேச ஆரம்பித்ததும், ரஷ்ய வீரர் கண்ணீர் விட்டு அழுதார். தங்கள் நாட்டை ரஷ்ய ராணுவம் தாக்கி வரும் நிலையில், சரணடைந்த ரஷ்ய வீரருக்கு உணவு கொடுத்து கவணித்துக்கொண்ட உக்ரைன் மக்களின் செயல் பலரது பாரட்டையும் பெற்று வருகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

RUSSIA, UKRAINIAN, SOLDIER

மற்ற செய்திகள்