துருக்கி பூகம்பத்தை 3 நாளைக்கு முன்னாடியே கணிச்ச நிபுணர்.. அதுவும் ரிக்டர் அளவோட சொல்லிருக்காரு.. யாருப்பா இவரு?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

துருக்கியில் நேற்று நிகழ்ந்த அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் அந்நாடே ஸ்தம்பித்திருக்கிறது. இந்நிலையில், இப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்படலாம் என நிபுணர் ஒருவர் 3 நாட்களுக்கு முன்னர் எச்சரிக்கை செய்திருந்தது தற்போது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கி பூகம்பத்தை 3 நாளைக்கு முன்னாடியே கணிச்ச நிபுணர்.. அதுவும் ரிக்டர் அளவோட சொல்லிருக்காரு.. யாருப்பா இவரு?

                           Images are subject to © copyright to their respective owners.

Also Read | "இது தான் சரியான நேரம்"... திடீர்ன்னு ஆஸ்திரேலியா கேப்டன் எடுத்த முடிவு.. கலங்கிய ரசிகர்கள்!!

மத்திய கிழக்கு நாடான துருக்கியில் நேற்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் தென் மத்திய பகுதியில் உள்ள கசியான்டெப் நகருக்கு அருகே இந்த நிலநடுக்க மையம் இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் சரிந்து விழுந்தன. இதனால் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க, வீரர்கள் பாடுபட்டு வந்தனர்.

ஆனால், அடுத்த அதிர்ச்சியாக மீண்டும் ஒரு நிலநடுக்கம் துருக்கியை நிலைகுலைய செய்தது. இந்த நடுக்கம் ரிக்டரில் 7.6 ஆக பதிவானது. இதனை தொடர்ந்து ஏற்பட்ட அடுத்தடுத்த அதிர்வுகள் அண்டை நாடுகளான  சிரியா, லெபனான், சைப்ரஸ், கிரீஸ், ஜோர்டான், இராக், ரொமானியா, ஜார்ஜியா, எகிப்து ஆகியவற்றிலும் உணரப்பட்டது. இதனையடுத்து நள்ளிரவிலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.

Researcher predicted Turkey and Syria earthquakes three days back

Images are subject to © copyright to their respective owners.

இந்த நிலநடுக்கத்தின் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்திருக்கின்றனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் துருக்கிக்கு மீட்பு மற்றும் மருத்துவ குழுவை அனுப்பியுள்ளன. இந்த சூழ்நிலையில் நெதர்லாந்தை சேர்ந்த ஃபிராங்க் ஹுகர்பீட்ஸ் எனும் ஆய்வாளர் 3 நாட்களுக்கு முன்னதாகவே இந்த நிலநடுக்கத்தை கணித்திருக்கிறார்.

Researcher predicted Turkey and Syria earthquakes three days back

Images are subject to © copyright to their respective owners.

ஃபிராங்க் Solar System Geomatry Survey (SSGEOS) எனும் ஆய்வு மையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை எழுதி இருந்தார். அதில்,"இப்போதோ அல்லது பிறகோ தென் மத்திய துருக்கி, ஜோர்டான், சிரியா மற்றும் லெபனான் ஆகிய நாடுகளில் நிலநடுக்கம் ஏற்படலாம். 7.5 ரிக்டர் அளவில் இதன் தாக்கம் இருக்கும்" என குறிப்பிட்டிருந்தார். அதேபோல, நேற்று (பிப்ரவரி 6) தென் மத்திய துருக்கியில் பூகம்பம் ஏற்பட்டிருக்கிறது. இது ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகி உள்ளதாக ஆய்வாளர்கள் அறிவித்திருந்தனர். இந்நிலையில் ஃபிராங்கின் இந்த ட்வீட் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Also Read | பிரதமர் மோடி & வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி அனுப்பிய Gift..! வைரல் Pics..!

RESEARCHER, PREDICTS, TURKEY AND SYRIA EARTHQUAKES, EARTHQUAKE

மற்ற செய்திகள்